கடந்த சில ஆண்டுகளில், திபெத்தின் பொருளாதார அமைப்பு இடைவிடாமல் வளர்ந்து வலுப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஜொல்மோ லுங்மா குழுமத்தின் தற்போதைய வளர்ச்சி, திபெத்திலிருந்து உள்பிரதேசத்துக்கு பரவியுள்ளது. சிங் தாவ் நகரில், அண்மையில் இரண்டு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், அமெரிக்காவின் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனியின், கூட்டு முதலீட்டுடன் நிறுவப்பட்ட சிங் தாவ் ஜின்சியு வேளாண் அறிவியல் தொழில் நுட்பக் கூட்டு நிறுவனம் தயாரிக்கும், இயற்கை கடற்பாசி உர வகைகளின் தரம், உள்நாட்டு முன்னேறிய தரத்தை எட்டியுள்ளது.
நடுவண் அரசின் தலைவர்கள், திபெத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் மிகுதியும் கவனம் செலுத்தியுள்ளனர். மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சி என்ற சிறப்பான கொள்கை, திபெத் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. திபெத்தின் எதிர்காலத்தின் மீது நிறைய நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார் அவர்.
கடந்த ஆண்டின் இறுதியில், நாச்சு பிரதேசத்தில், உள்ளூர் விவசாயி ஆயருக்கென, நெடுஞ்சாலை மற்றும் பாலக் கட்டுமானத் தொழில் நுட்பம் பற்றிய பயிற்சி வகுப்பு முதன்முறையாக நடத்தப்பட்டது. திபெத் ஜொல்மோ லுங்மா குழுமம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் இதற்கு நிதியுதவி செய்தன. மிகப்பல விவசாயி ஆயர், வறுமையிலிருந்து விடுபட்டு வளமடைவதற்கும், அவர்கள் கூடுதல் வருமானம் பெற்று, ஓரளவு வசதி படைத்த வாழ்க்கை நடத்த வழிவகுப்பதற்கும், இது உதவியாக அமைகின்றது.
1 2 3 4
|