இது வரை, இந்நிறுவனம் பதிவு செய்துள்ள மூலதனம், 7 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. வளமடைந்துள்ள ஹன் சிங்வாங், சமூகத்துக்கு நன்றி தெரிவிக்க அவர் மறக்கவில்லை. சுன்ஹுவா மாவட்டத்தில் 649 வறிய குடும்பங்கள், வறுமையிலிருந்து விடுபட அவர் உதவியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில், தமது சார்பிலும், தமது கூட்டு நிறுவனத்தின் சார்பிலும், 41 லட்சத்து 50 ஆயிரம் யுவானையும், 38 ஆயிரம் கிலோகிராம் கோதுமை மாவையும் ஹன் சிங்வாங் நன்கொடையாக வழங்கியுள்ளார். தமது இன்றைய வளர்ச்சிக்கு கட்சியின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையும் சிறந்த சூழலும் காரணமாகும் என்று அவர் குறிப்பிட்டார். மஞ்சள் ஆற்றின் கரையில் பிறந்து வளர்ந்த, ஒரு விவசாயியின் மகன் என்ற முறையில், சொந்த ஊருக்கும் பொது மக்களுக்கும் நன்மை புரிவது என்பது, அவரது நீண்டநாள் விருப்பமாகும். அரசியல் கலந்தாய்வு மாநாட்டு கூட்டத்தொடர் என்ற வாய்ப்பினை பயன்படுத்தி, தமது ஊர் மற்றும் தாய்நாட்டின் வளம் வளர்ச்சி ஆகியவற்றுக்கான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும், ஹன் சிங்வாங் தெரிவிப்பார். 1 2 3 4
|