40 வயதான Zhao Rong Hao என்பவர், வடக்கு சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் கொரிய இனத்தவர்கள் வாழும் Xin Fa வட்டத்தில் வசிக்கின்றார். ஐந்தாண்டுகளுக்கு முன், சில கிராமவாசிகளுடன் சேர்ந்து உற்றார் உறவினர்களைப் பார்க்க தென் கொரியாவுக்குச் சென்றார். அங்கு தங்கிய மூன்று திங்களுக்குள், அவர் சிறிய வேலை பார்த்தார். ஆனால் எதிர்பாராதவாறு, மூன்று ஆண்டுகாலம் வேலை செய்தார். தென் கொரியாவின் ஒரு ஐஸ் கிரீம் ஆலையின் இயக்குநர் அவரது அயரா உழைப்பை வெகுவாகப் பாராட்டி, அவரை, இவ்வாலையின் நிரந்தர பணியாளராக வேலைக்கு அமர்த்தினார் என்பது, இதற்குக் காரணமாகும்.
"ஆலைக்குச் சென்ற துவக்கத்தில், எதையும் செய்தேன். ஒரு திங்களுக்கு பின், இயக்குநரின் நம்பிக்கையைப் பெற்று, ஐஸ் கிரீம் சிப்பமிடும் இயந்திரத்தை இயக்கத் துவங்கினேன். நிரந்தர பணி என இது பொருட்படும். நாளுக்கு 12 மணிநேரம் பணி. ஒரு திங்களுக்கு சராசரியாக 8000 யுவான் வருமானம் கிடைக்கலாம். இவ்வாறு மூன்றாண்டுகளாக வேலை செய்தேன்" என்றார்.
இவ்வளவு அதிகமான வருமானத்தை, முன்பு அவரால் நினைத்துப் பார்க்கவும் முடியாது. ஏனெனில், Xin Fa வட்டத்தில் தலைமுறை தலைமுறையாக கொரிய இனத்தவர்கள், நெல் பயிரிட்டு வாழ்க்கை நடத்தினர். கிராமவாசிகளின் ஆண்டு நபர்வாரி வருமானம், ஆயிரம் யுவான் மட்டுமே. இது மிகவும் குறைவு.
1 2 3 4
|