3 ஆண்டுகளுக்குப் பின், Zhao Rong Hao, குறிப்பிடத்தக்க பணம் சேமித்து வைத்துள்ளார். தவிரவும், தமது ஊரின் வறுமைக் காரணத்தையும் புரிந்து கொண்டார். அதாவது தனியொரு உற்பத்தி, நெல் பயிரிடுதல் மட்டும் தான். அவர் கூறியதாவது:
"எனது பாட்டனார் காலம் முதல் நெல் பயிரிட்டு வந்தோம். பாட்டனார் தமது வாழ்நாள் முழுவதும் நெல் பயிரிட்டாலும், அவ்வளவு சீராக வாழவில்லை. உணவு உடைப் பிரச்சினை மட்டும் நீங்கியது. எனவே, உள்ளூர் பயிரிடுதல் கட்டமைப்பை மாற்றி, பழையனவற்றைப் புதுப்பிக்க முடியுமா" என, நான் நினைத்தேன் என்றார்.
அவர் தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பினார். கிழக்குச் சீனாவின் சங் துங் மாநிலத்தின் லே சோ நகரிலுள்ள ஒரு திராட்சைப்பழச் சாகுபடி ஆய்வகத்துக்குச் சென்று, Xin Fa வட்டத்தில் வளரக்கூடிய வகைகள் சிலவற்றை வாங்கியதோடு, அங்கு திராட்சைப்பழச் சாகுபடி பயிற்சியையும் பெற்றார். ஊர் திரும்பிய பின், சோதனை முறையில் திராட்சைப்பழம் சாகுபடி செய்தார். சோதனை வெற்றி பெற்றால், திராட்சைப்பழச் சாகுபடியை ஒரு தொழிலாக, முழு வட்டத்திற்கும் பரவல் செய்து, இதை வளர்ப்பதன் மூலம் வறுமையிலிருந்து விடுபடுவதில் கிராமவாசிகளுக்குத் துணை புரிய விரும்புவதாகக் அவர் சொன்னார்.
1 2 3 4
|