"கிராமத்தின் வருமானம் அதிகரித்துள்ளது. கிராமத்தின் முதியவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். முதியவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், இளைஞர்கள் concentrate their energies பொருளாதாரத்தை வளர்ப்பதில் ஈடுபடுவர். தற்போது, சிங் இன மக்கள் செல்வமடைந்துள்ளனர். இவ்வாண்டு கிராமத்தின் ஏற்பாட்டில், 20க்கு அதிகமான முதியோர் தலைநகர் பெய்சிங்கிற்குச் சென்று, சுற்றுலா செய்தனர். பெய்சிங்கில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், பொருளாதார வளர்ச்சி நிலைமையை அவர்கள் நேரில் கண்டுள்ளனர். அவர்கள் கிராமம் திரும்பிய பின் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அடுத்த தொகுதியாக, முதியோர் பலர் பெய்சிங்கிற்கு சுற்றுலா பயணம் செய்வர். அவர்களின் வாழ்நாளில், தாய்நாட்டின் வளர்ச்சியை நேரில் அறிந்து கொள்வர்" என்றார் அவர்.
 Wan Wei கிராமத்தின் ஏற்பாட்டில், கடந்த ஜூலை திங்கள், முதியோர் Zheng Xian Fang சுற்றுலா குழுவில் சேர்ந்து, தலைநகர் பெய்சிங்கில் உள்ள பல இடங்களில் பயணம் செய்தனர். தனது பெய்சிங் பயணம் பற்றி குறிப்பிடுகையில் அவர் மகிழ்ச்சியாக கூறியதாவது: "எனக்கு 60க்கு அதிகமான வயது. பெய்சிங்கிலிருந்து ஊர் திரும்பியப் பின், நோயால் பீடிக்கப்பட்ட தந்தை, பெய்சிங்கில் நான் பிடித்த படங்களைப் பார்த்தப் பின் அவரின் நிலைமை மேம்பட்டுள்ளது" என்றார், அவர். உலகின் பல்வேறு இடங்களின் நண்பர்கள், சிங் இனம் வாழும் மூன்று தீவுகளுக்கு வருகை தந்து, பயணம் செய்வதை Zheng Xian Fang வரவேற்கின்றார். இங்கு தங்க கடற்கரை, கன்னிக்காடு, சின் இனத் தனித்தன்மை வாய்ந்த நடையுடை பாவனைகள் காணப்படுகின்றன.
1 2 3 4
|