நலன் தரும் சீன அரசின் பல கொள்கைகள், விவசாயிகளின் பயிரிடும் உற்சாகத்தை அதிகரித்தன. ஆனால் குறைவான நபர்வரி வளைவு நிலப்பரப்பளவு தாழ்வான வளர்ப்புத் திறன் முதலிய குறைபாடுகள், விவசாயிகளின் வருமானத்தைப் பாதித்தன.
சில ஆண்டுகளுக்கு முன், சில இடங்களின் விவசாயிகள் நிலத்தை வாடகைக்கு அளித்து நலன் பெறத் தொடங்கினர். ஆன்ஹூய் மாநிலத்தின் feixi மாவட்டத்தின் விவசாயி jin zhonggong, இவ்வாறஉ செய்த விவயாசிகளில் ஒருவராவார். அவர் கூறியதாவது,
நான் தனிப்பட்ட முறையில் நிலத்தில் பயிரிட முடியாது. ஆனால், கிராமத்தில் நிறைய திறாமைசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் நிறைந்த அனுபவங்களும் உழைப்பு திறமையும் உடையவர்கள். எனவே நான் தனியாக நிலத்தில் பயிர் செய்வதை விட, நிலைத்தை அவர்களுக்கு வாடகைக்கு விடுவது நல்லது என்றார் அவர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி 17வது தேசிய மாநாட்டின் 3வது முழு அமர்வு, கிராமப்புறச் சீர்திருத்தத்தை விரைவுபடுத்தும் முடிவை நிறைவேற்றியது. கொள்கை ரீதியில், நிலத்தின் பயன்பாட்டு உரிமையை பிற தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு வாடகையாக வழங்குவதை அக்கூட்டம் ஒழுங்குபடுத்தியது. வாடகை, பரிமாற்றம், பங்கு முதலீட்டு ஒத்துழைப்பு முறை முதலிய வடிவங்களில் நிலத்தை பயன்படுத்துவதற்கு சீன அரசு ஒப்புதல் அளித்தது.
1 2 3 4
|