உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசம் சீனாவின் வடக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. அதை பற்றி குறிப்பிட்டால், பரந்த புல்வெளி, பால் கலந்த தேனீர், விருந்தோம்பல் மிக்க மங்கோலிய இன ஆயர்கள், ஆயிரம் ஆண்டு வரலாறுடைய மங்கோலிய இன நடையுடை பாவனைகள் முதலியவை மக்களின் நினைவில் காட்சியளிக்கின்றன. அண்மையில், தென் சீனாவின் சென் ச்சென் நகரில் கல்வி பயின்ற 86 வெளிநாட்டு மாணவர்கள் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் போ து நகரிலுள்ள ஒரு துவக்கப் பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுடன் கல்வி பரிமாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இரண்டு வாரக் காலத்தில், அவர்கள் மங்கோலிய இனத்தின் வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்களை அனுபவித்தனர்.
அந்த 86 மாணவர்கள், சென் ச்சென் சீன-பிரிட்டன் கல்லூரியில் 5வது வகுப்பில் கல்வி பயில்கின்றனர். இவர்கள் ஹாங்காங், தைவான், தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் முதலிய பிரதேசங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
போ காங் 2வது பரிசோதனை துவக்கப் பள்ளியில், அவர்கள், பகுதிப் பகுதியாகப் பல்வேறு வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர். அவ்விரண்டு பள்ளிகளின் ஆசிரியர்கள் முறையே மாணவர்களுக்குப் பாடம் சொல்லி தந்தனர். மாணவர்கள் கல்வி பயின்ற போது, அனுபவங்களைப் பரிமாற்றம் செய்தனர். இந்த ஒத்துழைப்பு பற்றி, போ காங் 2வது பரிசோதனை துவக்கப் பள்ளியின் தலைவர் dai yun hai கூறியதாவது
எமது பள்ளி உள் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சென் ச்சென் ஆசிரியர்கள் புதிய கல்வி தத்துவங்களைக் கொண்டு வந்தனர். அவர்களிடம் இந்தத் தத்துவங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். இத்தகைய புதிய கல்வி பரிமாற்ற முறைமை, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை வழங்கியது. அதன் மூலம், எதிர்காலத்தில் மேலும் அதிகமான மேலும் பல்வகையான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.
1 2 3 4
|