
இறைச்சி வகைகளைச் சாப்பிடும் கட்டமைப்பைச் சரிப்படுத்தி, மீன், கோழி ஆகியவற்றை அதிகமாக உட்கொண்டு, பன்றிறைச்சியைக் குறைவாக உட்கொள்ள வேண்டும் என்று நிபணர்கள் கூறினர். சோயா அவரை மற்றும் அதன் தயாரிப்புப் பொருட்களில் அதிக வெண்புரதம், fatty acid, உயிர் சத்துக்கள் உள்ளன. பால், மிக அதிக காலசியம் கொண்ட உணவு வகையாகும். ஒருவருக்கு நாள்தோறும் 300 மில்லி லிட்டர் பாலைக் குடிக்க வேண்டும் என்று யாங் சியௌ குவாங் தெரிவித்தார்.
அதிக சமையல் எண்ணெய் மற்றும் உப்பை உட்கொண்டால், கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை எளிதாக ஏற்படக் கூடும். நாள்தோறும், 25 கிராத்துக்குட்பட்ட சமையல் எண்ணெயையும், 6 கிராத்துக்குட்பட்ட உப்பையும் சாப்பிடலாம் என்று ஊட்டச் சத்து மருத்துவர் யூ காங் முன்மொழிந்தார். அவர் கூறியதாவது
25 கிராம் சமையல் எண்ணெயை உட்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்துச் சங்கம் முன்மொழிந்தது. அதாவது, ஒருவருக்கு நாள்தோறும் இரண்டரை தேக்கரண்டி சமையல் எண்ணெயை உட்கொள்ளலாம். சாதாரண பேருக்கு நாள்தோறும் 6 கிராம் உப்பை உட்கொள்ளலாம். சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் வாய்பட்டவருக்கு மேலும் குறைவான உப்பை உட்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தனிப்பட்ட உடல் நிலைமைக்கிணங்க, ஒவ்வொருவருக்கு வேறுபட்ட ஊட்டச் சத்து தேவை உண்டு. தவிர, சம நிலையிலான உணவு வகைகளின் அடிப்படையில், ஆக்கப்பூர்வமாக உடல் பயிற்சி செய்ய வேண்டும். இப்படி செய்தால், உங்களுக்கு நல்ல உடல் நலம் பெறலாம். 1 2 3 4
|