தற்போது, ஒரு புதிய வளர்ச்சி கட்டத்தில் சீனா நுழைந்துள்ளது. எரியாற்றல், மூலவளம், சுற்றுசூழல், கடுமையான நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு, தொழிலின் போட்டியாற்றல், பொது பாதுகாப்பு முதலிய துறைகள் கடுமையான அறைக்கூவல்களை எதிர்நோக்குகின்றன. முன்பு இருந்த தொழில் நுட்ப ஆராய்ச்சி திட்டம் இந்த தேவைகளை நிறைவேற்ற முடியாது.
ஆகையால், பழையத் திட்டத்தின் அடிப்படையில், சீனா தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டத்தை நிறுவியது. வேளாண்மை, மூலப் பொருள், தயாரிப்புத் தொழில் உள்ளிட்ட 11 துறைகளுடன் இது தொடர்புடையது. சுமார் 350 திட்டப்பணிகளுக்கு இது ஆதரவு வழங்கும் என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சின் வளர்ச்சி பிரிவின் தலைவர் வான் சியௌ ஃபாங் கூறினார். இதுவரை, முதலாவது தொகுதி திட்டப்பணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர் கூறியதாவது,
முதலாவது தொகுதியில் 147 திட்டப்பணிகள் இடம்பெறுகின்றன. மத்திய நிதியம் சுமார் 735 கோடி யுவான் முதலீடு செய்யும் என்றார் அவர்.
1 2 3 4
|