10 ஆண்டுகளுக்குப் பின், அதாவது 1988ஆம் ஆண்டு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் தைவான் விவகாரப் பணியகத்தின் தலைவராக Tang Shubei நியமிக்கப்பட்டார். இதனால் அவருக்கும் தைவானுக்கும் இடையிலான தொடர்பு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. ஓராண்டுக்குப் பின், சீன அரசவையின் தைவான் விவகாரப் பணியகத்தின் துணைத் தலைவராக Tang Shubei நியமிக்கப்பட்டார்.
அப்போது தான், இருகரைகளுக்கிடையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த தடை நிலை உடைக்கப்பட்டது. பழைய படைவீரர் சீனப் பெருநிலப்பகுதிக்குச் சென்று உற்றார் உறவினர்களைப் பார்க்க தைவான் அதிகார வட்டாரம் அனுமதித்தது. இருகரை பரிமாற்றம் இதனால் புதிய காலக்கட்டத்தில் நுழைந்தது. இருகரை அரசு சாரா பரிமாற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதற்காக அதிகாரம் பெற்ற அரசு சாரா இடை நிறுவனங்களான தைவான் நீரிணை தொடர்பு நிதியமும் தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கமும் நிறுவப்பட்டன. தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கம் 1992ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் நிரந்தர துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Tang Shubei, இருகரை கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தைக்கான முன்னணியில் நின்று வந்தார்.
1 2 3 4
|