பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஐ.நாவின் அஞ்சல்தலை
2022-01-15 16:50:27

2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்கும் வகையில், “அமைதியை முன்னேற்றும் விளையாட்டு” என்ற தலைப்பிலான அஞ்சல்தலைகளை ஐ.நா வினியோகிக்கும் என்று ஐ.நா அஞ்சல் நிர்வகம் ஜனவரி 14ஆம் நாள் அறிவித்தது. குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக ஐ.நா அஞ்சல்தலைகளை வினியோகிப்பது இதுவே முதல்முறையாகும். ருவான் ஃபெய்ஃபெய் என்னும் சீன ஓவியர் இந்த அஞ்சல்தலைகளை வரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐ.நா அஞ்சல் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும், நியூயார்க், ஜெனீவா, வியன்னா ஆகிய இடங்களிலுள்ள இந்நிர்வாகத்தின் கடைகளிலும் இந்த அஞ்சல்தலைகளை வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.