சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில், உலகளவில் இணையப் பயன்பாட்டாளர்களுக்கான கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. பாலஸ்தீனமும் இஸ்ரேலும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். மேலும் கடுமையான மனித நேய நெருக்கடி நிகழாமல் தவிர்க்க வேண்டும் என்று இக்கணிப்புக்குள்ளான 90.5 விழுகாட்டினர்கள் உறுதியாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஏப்ரல் 26ஆம் நாள் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
சில மேலை நாடுகள் அண்மைக்காலமாகத் தொடர்ந்து விமர்சித்து வரும் சீனாவின் “அதிக உற்பத்தி திறன்” என்னும் நியாயமற்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக்கும் செயலைச் சீனா உறுதியாக எதிர்க்கிறது.
சிச்சுவான் மாநிலத்தின் ஆபா சான் மற்றும் ஜியாங் இனத் தன்னாட்சி ச்சோவில் அமைந்துள்ள ஹுவாங் லுங் காட்சித்தலம், வண்ணமயமான குளங்கள், பள்ளத்தாக்கு, காடு, பனிமலை ஆகிய 4 சிறப்பு அம்சங்களால் புகழ் பெற்றது.
ச்சொங் ட்சிங் மாநகரில் உள்ள ஷன் டுங் துவக்கப் பள்ளி நடத்திய வசந்தகால விளையாட்டுப் போட்டியில் 10 மாணவர்கள் செய்தியாளர்களாக வேலை செய்து, பேட்டி காண்பது, வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது முதலிய பணிகளை நன்கு ஆற்றியுள்ளனர்.
மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் வெளியிட்ட செய்தியின் படி, பெய்ஜிங் நேரப்படி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் 20:59 மணிக்கு ஷென்ச்சோ-18 விண்வெளிக் கலத்தை ஏற்றிச்செல்லும் லாங் மார்ச் 2F ஏவுகணை, ஜியு சுவன் செயற்கை கோள் ஏவுதல் மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
சீனா, மலேசியாவுடன் இணைந்து இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தி, இரு தரப்புறவின் மேலும் பிரகாசமான வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறது.
சீன ஊடக குழுமமும் செர்பிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும் கூட்டாக நடத்திய “சீனத் திரைபடப் பருவம்” என்ற நடவடிக்கை ஏப்ரல் 25ஆம் நாள் பெல்கிரேடுவில் துவங்கியது.
ஈரான் நாட்டின் அரசு தலைவர் மற்றும் இலங்கை அரசு தலைவர் ஆகியோர் 290 ஜிகாவாட் மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ளும் உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சி செயல் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டம் 24ஆம் நாள் நடைபெற்றது. அண்மையில், ஜி 7 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கிழக்கு இந்தியா மற்றும் தெற்கு இந்தியாவின் சில மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடும் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேயிலை ஊர் என்று அழைக்கப்படும் ஹூபெய் மாநிலத்தின் ஹே ஃபெங் வட்டம், சொந்த வளங்களைப் பயன்படுத்தி அழகிய தேயிலை தோட்டத்தை அமைத்து, தனிச்சிறப்புடைய தேயிலை தொழிலை முன்னேற்றி வருகிறது. இப்பசுமையான காட்சி உங்களுக்காக~~
வானிலை, காலநிலை மற்றும் நீரியல் தொடர்பான ஆபத்தான காரணிகளின் பாதிப்புடன், 2023ஆம் ஆண்டு ஆசியா, உலகளவில் இயற்கை சீற்றங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.
கடந்த பிப்ரவரி திங்கள் 5.1 சதவீதமாக இருந்த இலங்கையின் பணவீக்கம் மார்ச் திங்களில் 2.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர துறை 23ம் நாள் தெரிவித்துள்ளது.
பொது மக்கள் புத்தக வாசிப்புக்கான 3வது கூட்டம் ஏப்ரல் 23ம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குவேன் மிங் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், பரப்புரைத் துறையின் தலைவருமான லீ ஷூலேய் துவக்க விழாவில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பின் பேரில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஏப்ரல் 24ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை, சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் 22ஆம் நாள் தெரிவித்தது.
குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ச்சொங் சுவோ மாவட்டத்தில் அமைந்துள்ள மிங் ஷி ஆற்று காட்சித்தலம், மலைகளால் சூழப்பட்டுள்ளது. அதற்கு அருகில் வயல், காடு மற்றும் கிராமப்புறக் காட்சிகள் பயணிகளைப் பெரிதும் ஈர்த்துள்ளன.
மாசுப்பாட்டை விளைவிக்கும் பாரம்பரிய மிதவை பந்துகளுக்குப் பதிலாக, கடல் சிப்பி வளர்ப்பு தளத்தில் மறு சுழற்சி செய்யக் கூடிய வண்ண மிதவை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஏப்ரல் 22ஆம் நாள் புனோம் பெனில் கம்போடியா தலைமையமைச்சர் ஹுன் மானெட்டுடன் சந்தித்துரையாடினார்.
காசா பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஹமாஸ் இயக்கத்தின் கோரிக்கை மாறவில்லை. ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் தடையாக இருந்தது என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் அறிக்கைக்கு ஹமாஸ் இயக்கம் ஏப்ரல் 22ஆம் நாளிரவு வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, தன் ஆக்கிரமிப்பு வரலாற்றை பற்றிய ஜப்பான் அரசின் மனப்பான்மை மற்றும் செயலை 82.45 விழுக்காட்டினர் கடுமையாக கண்டித்தனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு குளிரூட்டும் வசதியுடன் கூடிய தலை கவசங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பின் பேரில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஏப்ரல் 24ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை, சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் 22ஆம் நாள் தெரிவித்தார்.
சீன அறிவியலாளரால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் உயர் துல்லியமான சந்திரனின் நிலவியல் பற்றிய படத் தொகுப்பு ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹா மீ மாவட்டத்தில் பருத்தி மற்றும் தர்பூசணிப் பழங்களின் விதைகள் விதைக்கும் பணி நிறைவடைந்தது. வயல்களுக்கு அருகில் காடுகள் பசுமையாகக் காணப்படுகிறன.
இலங்கையின் குடியுரிமை மற்றும் குடியேற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கைக்கு கப்பல் மூலம் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு ஆன்லைன் விசா முறையை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஒன்றை ஒன்று பழிவாங்கும் ஆபத்தான சுழற்சியை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.
ஈரானில் உள்ள அணு ஆற்றல் வசதிகள் சீர்குலையவில்லை என்றும், தொடர்புடைய நிலைமையை உற்றுக் கண்காணித்து வருவதாகவும், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் 19ஆம் நாள் சமூக ஊடகம் மூலம் தெரிவித்தது.
உள்ளூர் நேரப்படி 19ஆம் நாள் முற்பகல், ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து கதிரியக்க நீரை வெளியேற்றம் 5ஆவது காலக்கட்ட திட்டத்தை டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் துவங்கியது.
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனத் தேசிய உணவு துறையின் வருமானம் 1இலட்சத்து 34 ஆயிரத்து 450 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.8 விழுக்காடு அதிகமாகும்.
ஏப்ரல் 18ஆம் நாள் 135ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சியின் நிறுவன அரங்கத்தினைச் சீன தலைமையமைச்சர் லீ ச்சியாங் பார்வையிட்டார். அப்போது, சீர்திருத்தம் மற்றும் திறப்பை ஆழமாக்கவும், புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியைக் கடைப்பிடிக்கவும், இப்பொருட்காட்சியை புதிய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உள்ளூர் நேரப்படி 19ஆம் நாள் 7 மணிக்கு, 2024ஆம் ஆண்டு இந்திய பொதுத்தேர்தல் துவங்கியுள்ளது. இப்பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று, ஜூன் திங்கள் 4ஆம் நாள் வரை நீடிக்கும்.
சன் ஹுவா என்பது, சீனாவில் மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு உடைய பாரம்பரிய தலை அலங்காரங்களில் ஒன்று. மலர்களை தலையில் சிறப்பாக வைத்து பெண்களுக்கு மெருகூட்டும் இவ்வழக்கம், சீன பொருள் சாரா மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
23ஆவது மாநகர் காட்டு மலர்கள் கண்காட்சி சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வருகிறது. 4 காட்சிப் பகுதிகள் கொண்ட இக்கண்காட்சி மே 5ம் நாள் வரை நீடிக்கும்.
இன்று கூ யூ என்ற சூரிய பருவ நாளாகும். இது, வசந்தகாலத்தின் இறுதி கட்டத்தைக் குறிப்பதாகும். சீனாவில் இன்று தொடங்கி, மழை அதிகரிப்புடன் தட்பவெப்பமும் உயரத் தொடங்கும்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜகர்தாவில் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரைடேனொவுடன் 18ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஆத்திரமூட்டக் கூடியஇராணுவ செயல்பாட்டை நிறுத்தவும், பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனத் தரப்பு அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது
அமெரிக்கா சீனாவிற்குத் திருப்பி அனுப்பிய 38 தொல் பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகளைச் சீன தரப்பு ஏப்ரல் 17ஆம் நியூயார்க்கில் பெற்றது. திரும்பி அளிக்கும் நிகழ்ச்சி 17 ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள சீன துணை நிலை தூதரகத்தில் நடைபெற்றது.
சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் 18ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை 14 கோடியே 10 இலட்சமாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய வானிலை மையம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அந்நாட்டில் 1949ஆம் ஆண்டு பதிவாகியதிலிருந்து வரலாறு காணாத கனமழை பெய்தது.
சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உந்து ஆற்றலாக புத்தாக்கம் திகழ்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகார அலுவலகத்தின் தலைவர் விட்டர் காஸ்பர் 17ஆம் நாள் சி.எம்.ஜிக்கு பேட்டியளித்த போது தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் உலக பொருளாதார வளர்ச்சிக்கான முன்னாய்வு பற்றிய புதிய அறிக்கையை 16ம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையில், சர்வதேச நாணய நிதியம், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களை நேரடியாக விமர்சித்தது.
ஏப்ரல் 17ஆம் நாள் ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசின் இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்தியின் படி, கடந்த 6 நாட்களில் அந்நாட்டின் பல மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 70 பேர் உயிரிழந்தனர், 56 பேர் காயமடைந்தனர். 2500க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. 2000க்கும் மேற்பட்ட கால்நடைகள் மாண்டு போயியுள்ளன.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியென் 17ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில், ஜெர்மன் தலைமையமைச்சர் ஷோல்ஸ் அண்மையில் மேற்கொண்ட 3 நாள் சீனப்பயணம் பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
பொருளாதாரத் துறையில் தரமான மற்றும் நியாயமான அதிகரிப்பு அடைய நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். பல்வேறு நாடுகளுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம் என்றும் லின் ஜியன் தெரிவித்தார்
ஏப்ரல் 16ஆம் நாள், சீன-அமெரிக்க நிதி பணிக்குழுவின் நான்காவது கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. சீன மக்கள் வங்கியின் துணை தலைவர் சுவான் சாங்னெங், அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் பிரென்ட் நெய்மன் ஆகியோர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர். அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஜேனட் யெலன் சீன பிரதிநிதி குழுவைச் சந்தித்தார்.
ஏப்ரல் 16ஆம் நாளிரவு சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் காணொலி வழியாக தொடர்புக் கொண்டு பேசினார்.
சர்வதேச நாணய நிதியம், உலக பொருளாதார வளர்ச்சிக்கான புதிய முன்னாய்வு அறிக்கையை 16ம் நாள் வெளியிட்டது. 2024ம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீடு, 3.2 விழுக்காடாக உயர்ந்து, ஜனவரி திங்களில் இருந்ததை விட 0.1 விழுக்காடு அதிகரித்தது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் துவங்கிய 135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியில் உயிரினங்கள் போல நுண்மதி நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வகை பொருட்கள், கொள்முதல் வணிகர்களை ஈர்த்து வருகின்றன.
சீனாவின் குவேய் ச்சோ மாநிலத்தின் ஜியேன் ஷி நகரில் 35 கோடி யுவான் செலவில், மின்சாரம் சேமிக்கும் புதிய எரியாற்றல் நிலையம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. மின்சாரப் பயன்பாட்டின் உச்ச நேரத்தில், நகரின் மின்சாரத் தட்டுப்பாட்டைத் தணிவு செய்ய இது உதவும்.
மத்திய கிழக்கில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமைக்கு இஸ்ரேல் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று துருக்கி அரசுத் தலைவர் ரெசெப் தயிப் எர்டோகன் 16ஆம் நாள் தெரிவித்தார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ அழைப்பின் பேரில், ஏப்ரல் 18 முதல் 23ஆம் நாள் வரை, இந்தோனேசியா, கம்போடியா, பப்புவா நியு கினியா ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றல் பற்றிய சர்வதேச கருத்தரங்குக் கூட்டம், ஏப்ரல் 15ஆம் நாள் பிரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்றது. நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றலும், மனிதகுலத்தின் பொதுவான எதிர்பார்ப்பும் என்ற கருப்பொருளைக் கொண்டு, உலக நாடுகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கூடி, ஆழமாக விவாதித்துள்ளனர். இந்த கருத்தரங்கு, சீன அரசவையின் செய்தி அலுவலகம், யுனெஸ்கோ, யுனெஸ்கோவுக்கான சீன தேசிய ஆணையம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது.
கண்களுக்கு பசுமை விருந்து!சீன மற்றும் வியட்நாம் எல்லையில் அமைந்துள்ள டெ டியேன் நீர்வீழ்ச்சி, ஆசியாவின் மிக பெரிய மற்றும் உலகளவில் 4வது பெரிய நீர்வீழ்ச்சியாகும்.
11வது பெய்ஜிங் சர்வதேச ஹட்பொட் உணவுகள் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. சீனாவின் உணவு நுகர்வு சந்தையின் மேம்பாட்டுடன், பிரதேசச் சிறப்புகளுக்கிணங்க, தனிச்சிறப்புடைய ஹட்பொட் உணவுகள் மென்மேலும் வரவேற்கப்படுகின்றன.
சீனாவின் ஹாய்நன் மாநிலத்தில் நடைபெற்று வருகின்ற 4வது சீன சர்வதேச நுகர்வு பொருட்காட்சியில், ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து உள்பட, பிராந்திய பன்முக பொருளாதாரக் கூட்டாளியுறவு ஒப்பந்தத்தின் 11 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 318 தொழில் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 15ஆம் நாள், சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபைசலுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
கிழக்கு சைபீரிய கடலில், சீன மக்கள் குடியரசுடன் தூதாண்மை உறவை நிறுவிய முதற்கட்ட நாடுகளில் ஆண்டிகுவா மற்றும் பார்புடா ஒன்றாகும். தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 41 ஆண்டுகளில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பு மற்றும் ஆதரவு அளிக்கும் அடிப்படையில், இரு நாடுகள் எப்போதும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரிய மற்றும் சிறிய நாடுகளிடையே சமமாகப் பழகி, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவதற்கான முன்மாதிரியாகவும் மாறியுள்ளன.
கொலம்பியாவின் செய்தி ஊடகம் 15ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி 2024ஆம் ஆண்டு முதல், பல மத்திய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயால், ஏறக்குறைய 10 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் அழிந்து வருகின்றன. அவற்றில் நிகரகுவா, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டில் நிதி நிலைத்தன்மைப் பணியின் அனுபவங்களை ஆராய்ந்ததோடு, தற்போதைய நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து, அடுத்த கட்ட பணிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஏப்ரல் 15ஆம் நாள் 12:12 மணிக்கு ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில், சீனா லாங் மார்ச்-2D ஏவூர்தியைப் பயன்படுத்தி, 4டி காவ்ஜிங் 3-01 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இச்செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நுழைந்ததுடன், இந்த ஏவுதல் பணி வெற்றி பெற்றது. எண்ணியல் வேளாண்மை, நகர்ப்புற தகவல் மாதிரி, உண்மையான 3டி காட்சி முதலிய வளர்ந்து வரும் சந்தைகளுக்கும், தேசிய நில அளவு கணக்கெடுப்பு, பேரழிவு தடுப்பு மற்றும் குறைப்பு, கடல்சார் கண்காணிப்பு முதலிய பாரம்பரிய துறைகளுக்கும், இந்த செயற்கைக்கோள் வணிக தொலை உணர்வு தரவுகளை வழங்குகிறது.
உள்ளூர் நேரப்படி ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள், இஸ்ரேலின் கோரிக்கையின்படி, இஸ்ரேல் மீது ஈரானின் இராணுவத் நடவடிக்கை குறித்து ஐ.நா பாதுகாப்பவை அவசர கூட்டம் ஒன்றை நடத்தியது.
ஹைட்ரஜன் தொழில்நுட்பத் துறையில், ஜெர்மனி மற்றும் சீன நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு தனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்று ஜெர்மன் தலைமையமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார். இரு நாடுகளின் நட்புறவுப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து ஆழப்படுத்தி இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்த புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல ஜெர்மனி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு எதிராக பல ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஈரான் செலுத்திய பின், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் மற்றும் அவரது தேசிய பாதுகாப்புக் குழுவின் மூத்த உறுப்பினர்கள் பெரிய அளவிலான பிராந்திய போரின் அபாயத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
20 மீட்டர் உயரமுள்ள சுவரில் தாவரங்கள் சூழ்ந்த காட்சி, பச்சை அருவி போல் உள்ளதா? இது, குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் நன்னிங் நகரில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் காணப்பட்டது.
மிளகாய் மற்றும் உப்புடன் சாப்பிடக் கூடிய மாங்காய் சிற்றுண்டி அண்மையில் பிரபலமாகியுள்ளது. மலர் வடிவமாக வெட்டப்பட்ட இச்சிற்றுண்டியை ருசிக்க ஆசைப்படுகிறீங்களா?
இஸ்ரேலின் மீது ஈரான் ராணுவ தாக்குதல் நடத்தியது பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஏப்ரல் 14ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், மருத்துவ மனையில் குழந்தை பிறப்பின்போது முழு கட்டணச் சலுகை, தாய்மார்களுக்கு மானியத் தொகை உள்ளிட்ட புதிய நடவடிக்கைகள் திபெத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
2023ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி, உலக சந்தையில் 14.2 விழுக்காடு வகித்தது. சரக்கு வர்த்தகத்தில் சீனா, 7 ஆண்டுகளாக தொடர்ந்து மிக பெரிய நாடு என்ற தகுநிலையைப் பெற்றுள்ளதாக சீன வணிகத்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக அலுவலகத்தின் பொறுப்பாளர் ஒருவர் 12ஆம் நாள் தெரிவித்தார்.
பிலிப்பைனின் முன்னாள் அரசுத் தலைவர் ரொட்ரிகோ துதெர்த்தே, தென் சீனக் கடல் முதலில் அமைதியாக இருந்தது, ஆனால் அமெரிக்கர்களின் வருகைக்குப் பிறகு, அது சண்டைகள் நிறைந்ததாக மாறிது என்று தெரிவித்தார்.
ஜெர்மன் தலைமையமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரது சீனப் பயணத்தை சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் அறிமுகப்படுத்தினார்.
போயிங் விமானத்தின் பாதுகாப்பு அறிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவையின் வணிகக் குழு 17ஆம் நாள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவுள்ளதாக 11ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி 11ஆம் நாள் நாணயக் கொள்கை கூட்டம் ஒன்றை நடத்தி, 3 முக்கிய வட்டிகளை நிலைநிறுத்தி, நாணயக் கொள்கையை தளர்த்தும் அறிகுறி வெளிபடுத்தியுள்ளது.
சீனத் தேசிய மீத்திறன் கணிமை(சூப்பர் கம்ப்யூட்டிங்)இணையம் ஏப்ரல் 11ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தற்போது கணித்தல் ஆற்றல் விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்க இது உதவுவதுடன், உயர்தர உற்பத்தி திறனின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, டிஜிட்டல் சீனாவின் கட்டுமானம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி முதலியவற்றுக்கு உறுதியான ஆதரவை வழங்கும்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் வார்சாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பன்னாட்டுத் தலைவர்களுடன் 2024முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் நெடுநோக்கு நிகழ்ச்சி நிரலை விவாதித்தார்.
ஐ.நா.பாதுகாப்பவை நடத்திய சிறப்புக் கூட்டத்தில் ஐ.நா.வில் அதிகார ப்பூர்வ உறுப்பு நாடாக பாலஸ்தீனம் இணைவது குறித்து ஒத்த கருத்து எட்டப்படவில்லை என்று ஐ.நா.பாதுகாப்பவையின் நடப்புத் தலைமை பதவி வகிக்கும் நாடான மால்டாவின் ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதி வனேசா ஃப்ரேசர் ஏப்ரல் 11ஆம் நாள் தெரிவித்தார்.
சீனாவின் டன் டுங் நகரிலுள்ள சதுப்புநிலத்தில் சூரிய மறைவுடன் வலம் வந்த பறவைகளின் கூட்டம் ஓர் அழகான இயற்கை ஓவியத்தை உருவாக்கியது. இவை முக்கியமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளிலிருந்து வந்தவை. இப்பிரமாண்டமான காட்சி சுமார் 1 மாதம் நீடிக்கும்.
உலக வர்த்தக அமைப்பு ஏப்ரல் 10ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் உலக சரக்கு வர்த்தக அளவு, 2.6 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீரான மற்றும் நிதானமான சீன-இந்திய உறவு, இரு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியதோடு, இப்பிரதேசம் மற்றும் உலகத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் துணைப் புரியும்.
மீன்கள் ஆற்றிலிருந்து வெளியே குதித்த பிரமாண்டமான காட்சி உங்களுக்காக~ 4 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தடை நடவடிக்கை நடைமுறைக்கு வந்த பிறகு, யாங் சி ஆற்று பள்ளத்தாக்கில் மீன்களின் வகைகளும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
இவை மலர்கள் அல்ல, தோசை தான். சீன மொழியில் ஜியேன் பிங் என்ற இந்த சிற்றுண்டிக்கான சமையல் போட்டி அண்மையில் நடைபெற்றது. போட்டியாளர்கள் தோசையின் வடிவத்தை மாற்றி, கலைநயமிக்க சுவையான உணவுகளைத் தயாரிக்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கிகளின் நிர்வாகத்தை சீர்திருத்துவதற்கான முன்மொழிவுக்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் வாகனங்களின் உற்பத்தி அளவு 66 லட்சத்து 6 ஆயிரமாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீனச் சர்வதேச நுகர்வுப்பொருட்காட்சி விரைவில் தொடங்கவுள்ளது. உலகளவில் நுகர்வுப் பொருட்களை காட்சிப்படுத்தும் இப்பொருட்காட்சி, இரட்டை சுழற்சி முறையில் நுகர்வுப் பொருட்களை வாங்கும் மேடையாகவும் திகழ்கிறது.
சீனாவின் பிற பகுதிகள் மற்றும் உலகில் உள்ள நண்பர்கள் யுன்னானில் பயணிக்க வரவேற்கின்றேன். யுன்னான் வாழ்க்கை முறையை எங்களுடன் இணைந்து அனுபவியுங்கள். யுன்னானில் வாழும் அழகு என்பது அதன் இயற்கைச் சூழலிலும், மக்களிடையேயும் கண்டறிய முடியும்.
ஐ.நா. வழங்கிய உதவி பொருட்கள் காசா பகுதிக்குள் கொண்டு செல்வதை இஸ்ரேல் இன்னும் தடுக்கிறது என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜென்ஸ் லெர்கே ஏப்ரல் 9ஆம் நாள் தெரிவித்தார்.
மீனவர்கள் நிறைய மீன்களுடன் துறைமுகத்துக்குத் திரும்பினர். கடலோர மாவட்டமான ருங் செங் நகரில் கடல் சார் துறைகள், உயர் தரம், புத்தாக்கம் மற்றும் பசுமை வளர்ச்சியை நோக்கிச் செல்லும் பாதையில் நடைபோட்டு வருகிறது.
சிறந்த புத்தக வாசிப்பு சூழ்நிலையை உருவாக்கும் வகையில், குடியிருப்பு பகுதியில் இலவச நூலகம் கட்டியமைக்கப்பட்டது. குழந்தை, முதியோர் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்திய புத்தகங்கள் அதில் வழங்கப்படுகின்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாக இணைவதற்கான பாலஸ்தீனத்தின் விண்ணப்பத்தை ஐ.நா.பாதுகாப்பவையின் புதிய உறுப்பு நாடு சேர்க்கைக்கான குழுவிடம் ஐ.நா.பாதுகாப்பவை ஏப்ரல் 8ஆம் நாள் சமர்ப்பித்தது.
காசாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பல்வேறு தரப்புகளின் பிரநிதிதிக் குழு 2 நாட்களுக்குக்குப் பிறகு, இறுதியான போர் நிறுத்த திட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சர்வதேச சமூகத்துக்கு அதிக வகைகளிலான மற்றும் தரமிக்க புதிய எரியாற்றல் வாகனத்தின் மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் மற்றும் வாகனங்களை சீனா வினியோகித்துள்ளது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல், கத்தார், அமெரிக்கா ஆகிய தரப்புகளின் பிரதிநிதிகள், கெய்ரோவை விட்டு, 2 நாட்களுக்குள் திரும்ப உள்ளனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பின் பேரில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஏப்ரல் 8ஆம் நாள் முதல் 9ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் அம்மையார் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீன-வியட்நாம் சரக்குத் தொடர்வண்டி 1594 கொள்கலன்களை அனுப்பியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 82 விழுக்காடு அதிகமாகும். வளர்ச்சி வேகம் வலுவாக இருந்தது.
ஈக்வேடருக்கான மெக்சிகோதூதரகத்தில் ஈக்வேடார் காவற்துறையினர்கள் நுழைந்து, அங்கு அடைக்கலம் கேட்ட முன்னாள் அரசுத் தலைவரைக் கைது செய்துள்ளது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் அண்மையில் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் 6ஆம் நாள் தெரிவித்தார்.
புதிய உயர்தர உற்பத்தித் திறன் சீன உயர்தரமான வளர்ச்சிக்கான புதிய உந்து ஆற்றலாகவும் உலகின் தொடரவல்ல வளர்ச்சிக்கான புதிய உந்து ஆற்றலாகவும் விளங்குகிறது என்று சியெஃபுங் தெரிவித்தார்.
ஜிங் மின் விடுமுறையில், பூத்துக் குலுங்கிய அலிசா மலர் கடலில் சுற்றுலா பயணிகள் மூழ்கியுள்ளனர். நீங்கள், எந்த இடங்களுக்குச் சென்று விடுமுறையை அனுபவிக்க விரும்புவீங்கள்?
சீனாவின் ஹாங்சோ நகரிலுள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு மரம் இணையத்தளத்தில் பிரபலமாகியுள்ளது. பசுமையான முழு தோட்டத்திலும் ஒரே ஒரு பெரிய மரமாக உள்ளதால் புகழ் பெற்றது. இப்பசுமையான காட்சி உங்களுக்காக~
அரை ஆண்டு நீடித்த பாலஸ்தீன-இஸ்ரேலின் புதிய சுற்று மோதலினாஸ், காசா பகுதி கடுமையான மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியது. இதைத் தவிர்த்து, இஸ்ரேலின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இவ்வாண்டின் துவக்கம் முதல், சந்தை தேவை தொடர்ந்து மீட்சியடைவதுடன், சீனாவின் தொழிற்துறை உற்பத்தியும் தொழிற்துறை நிறுவனங்களின் அலுவல் வருமானமும் விரைவாக அதிகரித்து வருகின்றன.
ஈரானின் பல்வேறு இடங்களில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சிரியாவுக்கான ஈரான் தூதரகத்தின் கன்சுலர் துறையின் கட்டிடம் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
னாவின் மீது அமெரிக்கா மேற்கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக தடை நடவடிக்கைகள் குறித்து சீனா கடும் கவலையைத் தெரிவித்து, உற்பத்தித் திறன் பற்றி முழுமையாகப் பதில் அளித்தது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சொத்துக்கள் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் மாதத்தில் 9.5 சதவீதம் அதிகரித்து 4.95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
கடந்த மார்ச் 29ம் நாள் வரையிலான ஒரு வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.952 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 645.583 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இவ்வாண்டின் மார்ச் மாதத்தில், சீனச் சேவைத் துறையின் வணிக அலுவல் குறியீடு 52.4 விழுக்காடாகும். இது பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட 1.4 விழுக்காடு அதிகம்.
ஹைட்டியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு உதவி அளிக்கும் விதமாக, ஒரு கோடியே 20இலட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி அளித்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான அலுவல் ஒருங்கிணைப்பு அலுவலகம் 4ஆம் நாள் தெரிவித்தது.
இஸ்ரேல் காசாவிலுள்ள அப்பாவி மக்களைப் பேணிக்காக்கும் நடவடிக்கைகளின் மீது அமெரிக்காவின் மதிப்பீட்டின் படி, காசா தொடர்பான அமெரிக்காவின் கொள்கை வகுக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்குள்ளே, சீனாவில் குடிமக்கள் அடையாள அட்டை, பாஸ்போர்ட், அன்னிய மக்களின் நிரந்தர வசிக்கும் அடையாள அட்டை ஆகிய சான்று பத்திரங்களைப் பயன்படுத்தி, இணையத்தில் டிஜிட்டல் பயணச்சீட்டை வாங்கும் சேவை முழுமையாக நிறைவேற்றப்படும்
காசாப் பிரதேசத்தில் உள்ள எரைஸ் நுழைவாயிலை மீண்டும் திறக்க இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளதாக, இஸ்ரேல் தலைமையமைச்சர் அலுவலகம் உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 5ஆம் நாள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
பட்டினி மற்றும் வறுமையை நீக்கி, கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சையை பரவல் செய்து, குழுந்தைகளின் பன்முக வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்யும் வகையில், தொடர்புடைய நாடுகள் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகம் உதவியளிக்க வேண்டும் என்று, ஐ.நாவிலுள்ள சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி காங்சுவாங் 3ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-ஷெரிப் பிரிவு தலைமையிலான ஆட்சி கூட்டணி செனெட் அவையில் பாதிக்கு அதிகமான இடங்களைப் பெற்றுள்ளது என்று பாகிஸ்தான் தேர்தல் குழுவின் அதிகாரி ஒருவர் 3ஆம் நாள் கூறினார்.
ஏப்ரல் 3ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, குவாங்சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தில் லாவோஸ் துணை தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சலெம்க்சேய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனா மற்றும் அமெரிக்காவின் கலந்தாய்வுக்குப் பின்பு, அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் லூயிஸ் யெல்லன் அம்மையார் ஏப்ரல் 4முதல் 9ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் ஏப்ரல் 3ஆம் நாள் தெரிவித்தார்.
மார்ச் திங்களில் சீன மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்து குறியீட்டைச் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஏப்ரல் 3ஆம் நாள் வெளியிட்டது. மார்ச் திங்களில் சீன மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்து குறியீடு தெளிவாக அதிகரித்துள்ளது. மொத்த வணிக அளவு குறியீடு கடந்த இரு ஆண்டுகளில் புதிய உச்சத்திற்கு உயர்ந்தது.
காசா பகுதியில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஏராளமான குழந்தைகளின் உடல் எடை சாதாரண நிலையை எட்டவில்லை என்று உலக சுகாதார அமைப்பு ஏப்ரல் 2ஆம் நாள் தெரிவித்தது.
கியூபாவின் பொருளாதாரம், வணிகம் மற்றும் நிதி மீதான அமெரிக்காவின் முற்றுகை சர்வதேச சட்டத்தையும் கியூபா மக்களின் மனித உரிமையையும் மீறியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
சிரியாவுக்கான ஈரானின் தூதரகம் மீதான தாக்குதலைச் சீனா கண்டித்துள்ளது. தூதாண்மை நிறுவனங்களின் பாதுகாப்பைச் சீர்குலைக்க கூடாது. சிரியாவின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிரதேச ஒருமைப்பாடு ஆகியவை மதிக்கப்பட வேண்டும்.
சீனாவின் பல இடங்களில் மலர்களைக் கண்டு ரசிக்கும் அழகிய காலம் வந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வசந்தகாலக் காட்சியை அனுபவிக்கின்றனர்.
பெய்ஜிங் முதல் பாரிஸ் வரை-- சீன-பிரெஞ்சு கலைஞர்களின் ஒலிம்பிக் பயணம் எனும் சீனக் கலைக் கண்காட்சிக்கான செய்தியாளர் சந்திப்பு ஏப்ரல் 2ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்தால் வெளியானது.
சீனா, இந்தியா, ரஷியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடையில் விசா கட்டணத்தை நீக்கிய சோதனை திட்டப்பணி, ஏப்ரல் 30ம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் ஹாரின் பெர்னான்டோ ஏப்ரல் முதல் நாள் அறிவித்தார்.
சீன ஊடகக் குழுமத்தின் சீன சர்வதேச தொலைகாட்சி நிறுவனம், தொழில் நுட்ப வாரியம், ஷாங்காய் மாநகரிலுள்ள சி.எம்.ஜி அலுவலகத்தின் உயர்தரமுள்ள வளர்ச்சிக்கான புத்தாக்க சாதனைகள் அதாவது சி.எம்.ஜியிலுள்ள சீனத் தேசிய முக்கிய ஆராய்ச்சிக் கூடத்திற்கான வெளியீட்டு கூட்டம் ஏப்ரல் 2ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளைப் பிரித்து வைக்கும் சாலை, மொத்தம் 7.8 கிலோமீட்டர் ஆகும். இதன் இரு பக்கங்களில் சீன வரலாற்றின் முக்கியமான நினைவுக் கட்டிடங்கள் மற்றும் புகழ் பெற்ற கட்டிடக் கூட்டங்கள் அமைந்துள்ளன.
ஏப்ரல் முதல் நாள் பிற்பகல் 5 மணியளவில், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சிரியாவுக்கான ஈரான் தூதரகத்தைச் சேர்ந்த தூதரகத் துறையின் கட்டிடங்களின் மீது வான் தாக்குதலைத் தொடுத்தது.
பாகிஸ்தானில் டாசு ஜல மின்னாற்றல் நிலையத் திட்டப்பணி குறித்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 5 சீன நாட்டவர்களின் பூதவுடல்கள், பாகிஸ்தான் இராணுவ விமானத்தின் மூலம், தாய்நாட்டுக்குத் திரும்பியது.
அண்மையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காகிதத்தால் தயாரிக்கப்பட்ட 500 பாண்டா உருவமுள்ள சிற்பங்கள், சீனாவின் தியேன் ஜின் மாநகரில் காட்சிப்படுத்தப்பட்டன. பாண்டா சிற்பங்களுடன் வசந்தகால அழகை உணர்ந்து கொள்ளலாம்.
இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் 8.31 இலட்சம் சீன வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் மின்சார வாகனங்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.5 சதவீதம் அதிகம். வாகனங்களின் ஏற்றுமதி வளர்ச்சியில் சீரான போக்கு காணப்படுகிறது.
ச்சுங் ஜிங் மாநகரைச் சேர்ந்த 30 வயதான இந்த இளைஞரின் தலைமையில், கடந்த 3 ஆண்டுகளில் மி வாங் என்ற கிராமத்தில் வாத்து வளர்ப்பு தளங்கள், மாட்டுப் பண்ணைகள், தரமிக்க வயல்கள் முதலியவை உருவாக்கப்பட்டன. கிராமவாசிகளின் வாழ்க்கை சீராக மேம்பட்டு வருகிறது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் குன்மிங்-லாவோஸின் வியன்டியன் இருப்புப்பாதை மூலம் 13லட்சத்து 80ஆயிரம் டன் எடையுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்கள் குன்மிங் சுங்கச்சாவடியால் கண்காணிக்கப்பட்டு மேலாண்மை செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் டி.பி.எஸ் தொலைகாட்சி நிலையம் 31ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, அண்மையில் ஜெ.என்.என் செய்தி இணையதளத்தால் ஜப்பானில் நடத்தப்பட்ட புதிய பொது மக்கள் கருத்துக் கணிப்பின் படி, அந்நாட்டின் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடா க்கான ஆதரவு விகிதம் 22.8 விழுக்காடாக உள்ளது. இவ்விகிதம் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட 0.1 விழுக்காடு குறைந்துள்ளது.
மஞ்சள் ஆற்றின் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த ஓராண்டில், மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கின் உயிரினச் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
சீனாவின் ஷன் டுங் மாநிலத்தின் சிப்போ நகரில் மஞ்சள் ஆற்றைக் கடந்த பாலத்தின் முக்கிய பகுதி கட்டியமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3425 மீட்டர் நீளமுள்ள இப்பாலக் கட்டுமானத்துக்கு 11 ஆயிரம் டன் உருக்கு பயன்படுத்தப்படுகிறது.
நுண்மதி நுட்ப வேளாண் தொழில் மண்டலங்கள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பெரிதாக உதவுகிறது. இங்கு, ஈரம், வெப்பம் மற்றும் வெயிலைக் கட்டுப்படுத்தும் பசுங்கூடாரத்தில் வேளாண் பொருட்களின் உற்பத்தி பாரம்பரிய முறையை விட 6 முதல் 8 மடங்கு அதிகரித்துள்ளது.
இது சீனாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள லுங் ச்சோ என்ற வட்டத்தின் ஒரு கிராமம். கடந்த சில ஆண்டுகளில் இங்கு கிராமச் சுற்றுலா பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த அமைதியான மற்றும் அழகான கிராமத்தைப் பார்க்க வாங்க வாங்க~
பாலஸ்தீன தலைமையமைச்சர் முகமது முஸ்தபா தலைமையில் புதிய அரசு, உள்ளூர் நேரப்படி மார்ச் 31ஆம் நாளிரவு, ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையின் ரமலான் நகரில் பதவி ஏற்றது.
பாலம் இடிந்து விழுந்த பின்னர் சிதிலங்களைச் சுத்தம் செய்வதற்கும் பால்டிமோர் துறைமுகத்தை மீண்டும் திறப்பதற்கும் தேவையான நேரத்தை தற்போது இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என்று மார்ச் 31ஆம் நாள் அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் பீட் புட்டிஜீக் தெரிவித்தார்.
சீனாவின் உயர்தர வளர்ச்சி மற்றும் 2035ஆம் ஆண்டு வளர்ச்சி போக்கு பற்றிய ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பு சிந்தனை கிடங்கு அறிக்கை வெளியீட்டு விழாவும் சர்வதேச கலந்தாய்வுக் கூட்டமும் 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் மார்ச் 29ஆம் நாள் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் ஆணையத்தின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 20ஆவது மத்திய கமிட்டியின் 2ஆவது முறை கண்காணிப்பு நிலைமை பற்றிய ஒட்டுமொத்த அறிக்கை பரிசீலனை செய்யப்பட்டது.
சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே மானுட பரிமாற்றத்துக்கான உயர் நிலை பேச்சுவார்த்தை அமைப்புமுறையின் 6ஆவது கூட்டம் மார்ச் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
புதுப்பிக்கப்பட்ட பின் இணையதளம், பரிவர்த்தனை, பயணம், கல்வி, வாழ்க்கை, சுற்றுலா முதலிய துறைகளில் வெளிநாட்டவர்களுக்கும் அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்களுக்கும் எளிமையாக அமையும்
வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா திகழ்கிறது என்றும் இப்புதிய சேவையின் மூலம் பாலிக்கு வருகை தர விரும்பும் இந்தியர்களுக்கு எளிமையாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் புதிய ஆற்றல் தயாரிப்புகள் போட்டி நன்மைகள் கொண்டதற்கான காரணம், அறிவியல் தொழில் நுட்ப வலிமை, உயர் தரம், முழுமையான தொழிற்துறை சங்கிலி ஆகியவை. போட்டியிடும் திறன் குறைவாக இருக்கும்போது, பிறர் மீது அவதூறு கூறும் செயல், வெட்கக்கேடானது.
4 நாட்கள் நீடித்த போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் 29ம் நாள் மாலை போ ஆவ் நகரில் நிறைவடைந்தது. 60க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2000 பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கெடுத்து, ஆசியா மற்றும் உலகின் நிலைமையை விவாதித்து, ஒத்த கருத்துகளை எட்டியுள்ளனர்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் துணைவியார் பெங்லியுவான் அம்மையார், 28ம் நாள் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டு வரும் ஜெர்மனியின் போ லே என்ற சீன மொழி பாடல் குழுவினர்களைச் சந்தித்து வரவேற்பு தெரிவித்தார்.
மார்ச் 28ஆம் நாள், சீனாவின் சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான 65ஆவது ஆண்டு நிறைவு தினமாகும். அதே நாள், சீனாவின் சிட்சாங்கில் நவீனமயமாக்க நடைமுறை பற்றிய சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான 65ஆவது ஆண்டு நிறைவுக் கருத்தரங்குக் கூட்டம் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.
சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாவ் லெஜி 28ஆம் நாள் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் தலைமை உரை நிகழ்த்தினார்.
பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாநிலத்தைச் சேர்ந்த பெஷம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஐ.நா பாதுகாப்பவை மார்ச் 27ஆம் நாள் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த அழகான இடம் பூங்கா அல்ல, கல்லூரி ஆகும். இக்கல்லூரி மாணவர்கள் சீனாவின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து, வசந்த கால அழகை அனுபவிக்கின்றனர். மலர்கள் மட்டுமல்ல, பாரம்பரிய உடை பண்பாடும் இங்கு வெளிப்படுகிறது.
கன் சூ மாநிலத்தின் டுன் ஹுவாங் நகரில் அமைந்துள்ள பாலைவனத்தில் ஒட்டக சவாரி சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாகியுள்ளது. இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் 26ம் நாள் இந்நகருக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 3.9 இலட்சத்தை எட்டியது.
பல்வேறு தரப்புகளுடன் மேலும் பயன்மிக்க நாணய பாதுகாப்பு வலைப்பின்னலை கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாக சீன மக்கள் வங்கித் தலைவர் பான் குங்ஷெங் தெரிவித்தார்.
இலங்கையின் கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக தகுதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் மார்ச் 27ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தி, 4வது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்களின் பொருட்காட்சி பற்றி அறிமுகம் செய்தது.
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் மார்ச் 27ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜனவரி முதல் பிப்ரவரி வரை, தேசியளவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபத் தொகை 91 ஆயிரத்து 406 கோடி யுவானாகும்.
சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் தேயிலை பறிக்கும் வேலையில், நுண்மதி தொழில் நுட்ப இயந்திர மனிதர் ஈடுபட்டு வருகிறது. நவீனத் தொழில் நுட்ப உதவியுடன் தேயிலை பறிக்கும் வேலை எளிதாக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவிலுள்ள இசை மண்டபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த புலனாய்வை ரஷியா தாமாகவே மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராவ்ரோவ் தெரிவித்தார்.
அமெரிக்க மேரிலாந்து மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்தபோது, பாலத்தில் எட்டு பேர் தண்ணீரில் விழுந்தனர். மார்ச் 26ஆம் நாள் வரை இருவர் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டனர். மற்ற 6 பேரைக் காணவில்லை என்று அம்மாநிலப் போக்குவரத்து துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள தாசு Dasu நீர் மின்னாற்றல் நிலையத் திட்டப்பணியின் மீதான பயங்கரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகம் அறிக்கையை வெளியிட்டது.
இலங்கையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையான அனைத்து பள்ளிகளை சேர்ந்த 16 லட்சம் மாணவர்கள், இவ்வாண்டு இலவச காலை உணவு வழங்கும் பள்ளி உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 26ஆம் நாள் தொடங்கியது. 4 நாட்கள் நீடிக்கும் போ ஆவ் மன்றம் 40க்கும் மேற்பட்ட துணை மன்ற நிகழ்வுகளை நடத்த உள்ளது.
சீனாவின் வளர்ச்சி மன்றக் கூட்டத்தொடரின் 2024ஆம் ஆண்டு கூட்டம் 25ஆம் நாள் நிறைவடைந்தது. உயர்தர வளர்ச்சி மற்றும் உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை விரைவுபடுத்துவதில் சீன அரசு உறுதியாக உள்ளது.
இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்துக்களுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லிச்சியென் 25ஆம் நாள் பதிலளித்தார்.
அனல் மின் நிலையத்திலிருந்து வரும் கழிவு நீர் கையாளப்பட்டு தரநிலைகளை பூர்த்தி செய்த பின், கோபி பாலைவனத்தில் வெளியேற்றப்பட்டு, செயற்கை ஏரி ஒன்று உருவாகியது.
ரஷியாவின் மாஸ்கோவிலுள்ள இசை மண்டபத்தில் நடத்தப்பட்ட கடுமையான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ரஷிய அரசுத் தலைவர் புதின் 25ஆம் நாள் கூட்டாட்சி பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தினார்.
ரமதான் காலத்தின் போது காசா பிரதேசத்தில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென 25ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு வசதியான ஹைய்ஜி-2 என்ற ஆழ் கடல் ஜேக்கிட்(deepwater jacket) அண்மையில் சீனாவின் முதலாவது ஆழ் கடல் எண்ணெய் வயலுக்கு அனுப்பப்பட்டது. 36430 டன் எடையுள்ள இந்த இயந்திரம், 10 கப்பல்களின் உதவியுடன் துறைமுகத்திலிருந்து வெளிகொண்டு வரப்பட்டது.
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் அல்டே மாவட்டத்தில் கால்நடைகள் இடம்பெயரும் பணி தொடங்கியுள்ளது. இவ்வாண்டு மொத்த மேய்ச்சல் பிரதேசத்தில் சுமார் 3 இலட்சம் கால்நடைகள், 10 நாட்களுக்குள் 19 பழமையான மேய்ச்சல் வழிகளைக் கடந்து செல்லும்.
ரஷியாவின் மாஸ்கோவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழ்ந்தோருக்கு அந்நாட்டு அரசுத் தலைவர் புதின் 24ஆம் நாள் அரசுத் தலைவர் மாளிகையில் அஞ்சலி செலுத்தினார்.
சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் 24ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. “வளர்ந்து வரும் சீனா” என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும்.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் மார்ச் 22ஆம் நாளிரவு நடத்தப்பட்ட கடுமையான பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 133 பேர் உயிரிழந்தனர் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார்.
காச நோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிக்கான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதர் பெங் லீயுவான் ச்சாங்ஷா நகரில், காச நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியை ஆய்வு மேற்கொண்டார்.
சீன வணிக அமைச்சகம் 22ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில், சீனாவில் புதிதாக 7160 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
ஐ.நா.பாதுகாப்பவை மார்ச் 21ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஹைட்டியில் நடந்த வன்முறைத் தாக்குதலைக் கண்டித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஹைட்டிக்குள் சட்டவிரோதமாகக் கொண்டு்வருவது குறித்து இந்த அறிக்கையில் கடும் கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பச்சை தேயிலை பறிக்கும் பணி அண்மையில் தொடங்கியது. சீனாவின் ஹாங் ச்சோ நகரில் அமைந்துள்ள பல்வேறு தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டு வரும் காட்சி உங்களுக்காக~
காடுகளின் உயிரினச் சூழலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம், மார்ச் 21ம் நாள் உலகின் காடுகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பசுமையான மற்றும் உயிராற்றல் மிக்க காடுகள், நமது பொக்கிஷம். அவற்றைக் கூட்டாகப் பாதுகாப்போம்.
அமெரிக்கா எப்பொழுதும் தனது புவிசார் அரசியல் சுய நலன்களுக்கு சேவை செய்ய, மற்ற நாடுகளில் சர்ச்சைகளைத் தூண்டுவதற்கு பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி வருகின்றது
ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அலுவலகத்தின் துணை செயல் இயக்குநர் கார்ல் ஸ்கோவ் மார்ச் 20ஆம் நாள் சூடானின் நிலைமை குறித்து ஐ.நா.பாதுகாப்பவைக்குத் தெரிவித்தார். அவர் கூறுகையில், சூடானில் ஆயுத மோதல் உலகின் மிக மோசமான பசி நெருக்கடியைத் தூண்டுகின்றது என்றார்.
சீனாவின் தங்கத் தேயிலை ஊர் என்று அழைக்கப்படும் சியங் சீ தூஜியா மற்றும் மியாவ் இனத் தன்னாட்சி ச்சோவில், தேயிலை தயாரிப்பு, ஒட்டுமொத்த காட்சிப்படுத்துதல், தேநீர் சுவை முதலியவை குறித்து நடத்தப்பட்ட தேயிலை தயாரிப்பு போட்டியில் 14 குழுக்கள் கலந்து கொண்டு போட்டியிட்டன.
சீனாவின் ஜிங் டாவ் துறைமுகத்தில் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான சரக்கு போக்குவரத்து சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் இத்துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குக் கொள்கலன்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது.
மார்ச் 20ம் நாள் சீன பாரம்பரிய ச்சுன் ஃபன் என்ற சூரிய பருவ நாள். இது, வசந்தகாலத்தின் 4வது பருவ நாளாகும். அன்று, பகல் மற்றும் இரவு நேரம் சமமாகும். அதற்குப் பின், பகல் நேரம் இரவை விட, நீண்டு வரும்.
ரஃபா பகுதி மீதான இராணுவச் செயல்பாட்டை நிறுத்தக் கோரிய அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனின் முன்மொழிவை இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யஹு 19ஆம் நாள் மறுத்து விட்டார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோரின் முன்னிலையில், சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான 7ஆவது சுற்று வெளியுறவு மற்றும் நெடுநோக்கு ரீதியான பேச்சுவார்த்தை மார்ச் 20ஆம் நாள் கான்பராவில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மார்ச் 20ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் அந்நாட்டு தொழில் மற்றும் வணிகம், நெடுநோக்கு முதலிய துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
பூத்துக் குலுங்கிய செரி மலர்கள் சூழ்ந்த இவ்விடம் சீனாவின் குவென் மிங் நகரில் அமைந்துள்ளது. சூரியன் ஒளிக்கதிர்கள் போன்ற காட்சி, பொது மக்களை ஈர்த்துள்ளது.
சந்திரன் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கியூச்சியௌ-2 (Queqiao-2) எனும் செயற்கைக்கோள் மார்ச் 20ஆம் நாள் புதன்கிழமை காலையில் சீனாவின் வென்சாங் விண்வெளி ஏவுத்தளத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ச்சாங் டெ நகரம், சீனாவின் வேளாண் சாகுபடி பண்பாடு தோன்றிய முக்கிய இடங்களில் ஒன்றாகும். செரி மலர்களின் தாயகம், சர்வதேச சதுப்புநில நகரம், மலை மற்றும் நதிகள் சூழ்ந்த அழகிய மாவட்டம் முதலிய சின்னங்கள் உடைய நகரம் என்ற பெருமை ச்சாங் டெ நகருக்கு உண்டு.
உயர்மட்ட வெளிநாட்டு திறப்பை முன்னெடுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்துதல் குறித்த செயல் திட்டத்தைச் சீன அரசவை பொது அலுவலகம் அண்மையில் வெளியிட்டது. இதில், சீன பாணி நவீனமயமாக்கலில் பங்கேற்பதிலும், சீனப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் பொதுவான செழிப்பை ஊக்குவிப்பதிலும், வெளிநாட்டு முதலீடு முக்கிய ஆற்றலாகும் என்றும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்தும் வகையில், ஷி ச்சின்பிங்கின் புது யுகச் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோசலிச சிந்தனையை வழிகாட்டியாக நாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் குழு, தேசிய பாதுகாப்பைப் பேணிகாக்கும் விதிகள் பற்றிய மசோதாவை முழு ஒப்புதல் வாக்குகளுடன் ஏற்றுக்கொண்டுள்ளது.
தூரத்திலிருந்து வரும் நண்பர்கள் என்ற சீன-அமெரிக்க இளைஞர் பரிமாற்ற நடவடிக்கை மார்ச் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பங்கேற்கும் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஒன்றான இந்த நடவடிக்கை, சீன ஊடக குழுமம், அமெரிக்க-சீனா இளைஞர் மற்றும் மாணவர் பரிமாற்ற சங்கம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பிரச்சாரத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ள ஸ்டீலாகூம் நகரின் தலைவர் டிக் முரி, சர்வதேச பரிமாற்றத்திற்கான சீன கல்வி சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஃபூ போ ஆகியோர் இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.
கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, கடல் பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில், சீனாவின் ஷன் டுங் மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்கள் பலவற்றில் மீன்பிடி தொழில் மாற்றம் நடைபெற்று வருகிறது.
மோசமான வானிலை உள்ளிட்ட காரணிகளின் பாதிப்பைத் தவிர்க்கும் விதம், நாற்றுகள் வளர்ப்பதில் தன்னியக்கம் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாற்றுகளை வளர்க்கும் தட்டுகள், தட்பவெப்பம் கட்டுப்படுத்தக் கூடிய பசுங்கூரைக்கு அனுப்பப்படுகின்றன.
சீனாவிலுள்ள அமெரிக்க தூதர் பெர்னெஸ் அண்மையில் சீனா பற்றி தெரிவித்த எதிர்மறைக் கூற்றானது, சீன-அமெரிக்க தலைவர்கள் சன்ஃபிரான்சிஸ்கோ சந்திப்பில் உருவாக்கிய முக்கிய ஒத்தக் கருத்துகளுக்கு அத்துமீறிய வகையில் அமைந்துது.
இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 10 கோடி டாலர் நிதியதவி அளிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மண்டல மேலாண்மையை வலுப்படுத்துவது குறித்த அறிக்கையைச் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது அலுவலகம் மற்றும் சீன அரசவையின் பொது அலுவலகம் வெளியிட்டன. 2025ஆம் ஆண்டுக்குள் சீனா சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மண்டல மேலாண்மை அமைப்பை நிறுவும் என்றும், 2035ஆம் ஆண்டுக்குள் முழுமையான, மென்மையான மற்றும் திறமையான சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மண்டல மேலாண்மை அமைப்பை நிறுவி, சுற்றுச்சூழலின் மேம்பாட்டிற்கும், அழகான சீனா கட்டுமானம் என்ற இலக்கை நனவாக்குவதற்கும் வலுவான ஆதரவை வழங்கும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சிரியாவில் தற்போதைய நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் செயல்முறை முதலியவற்றில் அறைகூவல்களை எதிர்கொள்கிறது என்று ஐநா தலைமைச் செயலாளரின் சிரியாவிற்கான சிறப்பு தூதர் கீர் ஒட்டோ பெடர்சன் 17ஆம் நாள் சிரியாவின் தலைநகரான தமஸ்கஸில் தெரிவித்தார்.
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் பிப்ரவரி வரையான பொருளாதாரம் பற்றி தரவுகளின்படி, இக்காலத்தின் போது, சீனாவின் உற்பத்தித் தேவை நிதானமாக அதிகரித்து வருகிறது.
மத்திய காசா பகுதியின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலின் இராணுவம் 17ஆம் நாள் அதிகாலையில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். மத்திய காசா பகுதியில் உள்ள நுசைராத் அகதிகள் முகாம் மற்றும் புரேஜ் அகதிகள் முகாம் அன்று இஸ்ரேலின் இராணுவத்தால் தீவிரமாக தாக்கப்பட்டன. குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வெண்கலம், தங்கம், ஜேடு உள்ளிட்ட 363 தொல்பொருட்கள், ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வரும் சன்ஷிங்டுய் பண்டையக்கால நாகரிகக் கண்காட்சியில் பொது மக்களுக்குக் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் சீன நாகரிக வளர்ச்சியின் பல்வகை தன்மை மற்றும் திறப்புத் தன்மையை மக்கள் உணர்ந்து கொள்ளலாம்.
காசா பிரதேசத்தில் நோயாளிகளுக்கான ஆதரவு மற்றும் உதவியைச் சர்வதேச சமூகம் அதிகரிக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கான இயக்குநர் வேண்டுகோள் விடுத்தார்.
மார்ச் 16ஆம் நாள் 220 கிலோமீட்டர் நீளமுடைய கடலடி தரை குழாய்கள் மூலம், கடல் டேங்கர்களில் இருந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எண்ணெய் முதன்முறையாக அனுப்பப்பட்டதுடன், சீன நிறுவனம் கட்டியமைத்த வங்காளத்தேசத்தின் முதல் கடல்-தரை ஒருங்கிணைந்த மிகப் பெரிய எண்ணெய் சேமிப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் முழுமையாக இயங்குத் தொடங்கியது.
ஜனநாயகம் என்பதைப் பயன்படுத்தி தனது நலனுக்காக பிற நாடுகளை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருவதாக சிஜிடிஎன் மற்றும் ரென்மின் பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் பலரும் தெரிவித்துள்ளனர்.
ரஷிய அரசுத் தலைவர் தேர்தல் வாக்கெடுப்பு தொடங்கிய பின்பு, ரஷியாவின் தொடர்புடைய அமைப்புமுறைகள் மற்றும் இணையத் தளங்கள் மீது பெருமளவிலான இணையவழி தாக்குதல் நடந்து வருகிறது.
காசாவின் தெற்கு பகுதியிலுள்ள ராஃபாவின் மீது தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுவது பற்றிய செய்தியில் பெரும் கவனம் செலுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரொஸ் 16ஆம் நாள் தெரிவித்தார்.
அமெரிக்காவின் ஜனநாயகமானது அதன் மையச் சிந்தனையிலிருந்து விலகிச் செல்வதாக சீனாவின் சிஜிடிஎன் மற்றும் ரென்மின் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 60ஆண்டுகளில் 16முறை சீனாவில் பயணம் மேற்கொண்ட அவர், சீனாவில் நடந்த தலைகீழ் மாற்றத்தை நேரில் கண்டுள்ளதோடு, நாடு பெற்றுள்ள வளர்ச்சியினால் சீனாவின் மீதான மரியாதை கூடியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறையாக்கம் பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு இந்திய அரசு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது.
ஏமென் மீது ஆயுத ஆற்றலைப் பயன்படுத்தும் அதிகாரத்தை ஐ.நா பாதுகாப்பவை எந்த நாட்டுக்கும் வழங்கவில்லை என்று ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி கெங் சுவாங் வலியுறுத்தினார்.
2024ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில், யாங்சி ஆற்றுக் கழிமுக பிரதேசத்தில் அன்னிய வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை, வரலாற்றில் புதிய சாதனையைப் பெற்றுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடற்கரைப் பகுதிகளுக்கு அப்பால் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுத்தலைவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய பெரிய தாக்குதலில் அண்மை கிழக்குப் பகுதிக்கான ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகள் நிவாரணம் மற்றும் பணி முகாமைச் சேர்ந்த 12 பணியாளர்கள் ஈடுபட்டிருப்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதனையடுத்து அமெரிக்கா, கனடா முதலிய பத்துக்கும் மேற்பட்ட மேலை நாடுகள், இம்முகாமுக்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளன.
2024ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சுமார் 1லட்சத்து 70ஆயிரத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு வாகனங்கள் ஷாங்காயின் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டில் வீட்டுத்தோட்டத் திட்டங்களுக்காக 7 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கையின் விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 55ஆவது கூட்டத் தொடரின் போது, அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்புகளின் மூலம், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்துவது என்ற தலைப்பிலான கிளை கூட்டம் மார்ச் 12ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்றது.
மார்ச் 13ஆம் நாள், தென் காசா பகுதியின் ரஃபா நகரில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் ஒரு உணவு விநியோக மையம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.
மார்ச் 14ஆம் நாள் முதல் சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து வந்த சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகளுக்கு விசா இல்லாத கொள்கையைச் சீனா செயல்படுத்துகின்றது.
குறிப்பிட்ட நிலைமைக்கு ஏற்பச் செயல்படுத்தி உயர்தரமான உற்பத்தித் திறனை வளர்ப்பது பற்றிய பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் கருத்து மக்களிடையிலும் செய்தி ஊடகங்களிலும் பெரும் கவனம் ஈர்த்தது.
சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் 13ஆம் நாள் செய்தியாளர் நடத்திய கூட்டத்தில் தைவானின் மீதான மத்திய அரசின் கொள்கை தெளிவானது மற்றும் நிலையானது என்று தெரிவிக்கப்பட்டது.
துருக்கி ராணுவ வட்டாரமும், ஈராக் உள்ளூர் அதிகாரிகளும்இரு நாட்டு எல்லைக் கோட்டில் பாதுகாப்பு கூட்டம் நடத்தி, எல்லைக் கோட்டில் பாதுகாப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தனர்.
ஜப்பானின் ஃபுகுஷிமாகென் அணு மின் நிலையத்திலிருந்து கதிரியக்க நீர் கடலில் வெளியேற்றப்படுவது, மனித குலத்தின் ஆரோக்கியம், உலக கடலின் சுற்றுச்சூழல், சர்வதேசப் பொது நலன் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
இலங்கையில் யானை பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக 4,500 வளர்ச்சி அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாக, வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாண்டில், சீன வாகனங்களின் ஏற்றுமதி வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களில் சீன வாகனங்களின் ஏற்றுமதித் தொகை, முந்தைய ஆண்டை விட 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தாக சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய தாராள வர்த்தக சங்க நாடுகளுடன் இந்தியா ஞாயிற்றுக்கிழமை வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மார்ச் 11ஆம் நாள், ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் உக்ரைன் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடாக மாறியுள்ளது.
ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்கள் புதிய சுற்று வேலை நிறுத்தம் நடத்தவுள்ளனர். இதில் சரக்கு ரயில் ஓட்டுநர்கள் 11ஆம் நாள் 18 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பாலஸ்தீனச் செய்தி ஊடகம் மார்ச் 10ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அன்று காசா பிரதேசத்தின் பல இடங்களின் மீது இஸ்ரேல் படை வான் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 63பேர் உயிரிழந்தனர்.
இந்தியப் தலைமையமைச்சர் நரேந்திர மோடி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவின் விலையை 14.2 கிலோ கொண்ட சிலிண்டருக்கு 100 இந்திய ரூபாய் குறைப்பதாக அறிவித்தார்.
உக்ரைன் பிரச்சினை குறித்து ஐ.நா பாதுகாப்பவை 8ஆம் நாள் நடத்திய அவசர பரிசீலனை கூட்டத்தில் ஐ,நாவுக்கான சீனத் துணை நிரந்தர பிரதிநிதி கெங் சுவாங் உரை நிகழ்த்தினார்.
இவ்வாண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் திங்கள், உக்ரைனுக்கு முறையே 450 கோடி யூரோ மற்றும் 150 கோடி யூரோ மதிப்புள்ள உதவியை ஒப்படைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டது.
துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன், துருக்கியில் பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கியுடன், மார்ச் 8ஆம் நாள் வெளிப்படையற்ற பேச்சுவார்த்தை நடத்தினார்.
மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமையை உயர்த்துவதற்கான உலகத் திட்டத்தை, ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் மார்ச் 8ஆம் நாள் துவங்கி வைத்தார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனும் ஸ்வீடனின் தலைமையமைச்சர் கிலிஸ்தேசனும் மார்ச் 7ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் கூட்டாக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்கும் சட்ட ஆவணத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தனர்.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் திட்டப் பணிகளில் 125 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு தலைமை அமைச்சர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 8ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த முழு அமர்வில் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டி, உச்ச மக்கள் நீதிமன்றம் மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றம் ஆகியவற்றின் பணி அறிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டன.
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் மார்ச் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் சீனச் சரக்கு வர்த்தகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மொத்த தொகை, 6 இலட்சத்து 61 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.7 விழுக்காடு அதிகம்.
அமெரிக்காவுக்கான சீனாவின் கொள்கைகள் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் இருக்கின்றன. அதேவேளையில், சீனாவின் வளர்ச்சியை புறநிலையிலும் பகுத்தறிவுடனும் பார்த்து, சொல்லும் செயலும் ஒன்றாக இருந்து தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
முதலாவது மற்றும் இரண்டாவது மதிப்பாய்வுகளுக்குத் தேவையான பொருளாதாரக் கொள்கை பற்றி எகிப்துடன் நிபுணர் நிலையான ஒப்பந்தம் எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மார்ச் 6ஆம் நாள் அறிவித்தது. இது எகிப்துக்கான கடன் தொகையை 300 கோடி டாலரிலிருந்து 800 கோடி டாலருக்கு அதிகரித்துள்ளது.
ஜியாங் சூ மாநிலத்தின் ஹாய் அன் நகரில் காற்றாலை மற்றும் ஒளிமின்னழுத்தத் தொழில் உள்ளிட்ட புதிய எரியாற்றல் தொழில்கள், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ச்சியான பசுமை உந்து சக்தியை வழங்குகின்றன.
சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் டிங் அன் வட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய தக்காளிகள், உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் தொழில்களில் ஒன்றாகும். நல்ல சுவை கொண்ட இவ்வகை தக்காளிகளுக்கு உயிர்ச்சத்துக்கள் அதிகம்.
சீனாவின் 2வது பெரிய வெளிநாட்டு வர்த்தக நுழைவாயிலான ஜிங் டாவ் நகரின் துறைமுகத்தில் இரவில் கூட, கொள்கலன் ஏற்றி இறக்கல் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறன.
சீன வெளியுறவு அமைச்சகம் 6ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், தென் சீனா கடல் பற்றிய பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு மற்றும் கருத்துக்களைக் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அரசுப் பணியறிக்கையிலிருந்து கிடைக்க பெற்றுள்ள முக்கியத் தகவல்களில் ஒன்றாக, சீனா உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி, பரஸ்பரம் பலன் தரும் கூட்டு வெற்றியை முன்னேற்றும்.
மார்ச் 5ஆம் நாள், ஏ.பி எனும் செய்திஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, அரசுத் தலைவர் பதவிக்கான அமெரிக்கக் குடியரசு கட்சியின் வேட்பாளரும், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் பிரதிநிதியுமான நிக்கி ஹேலி வெர்மான்ட் மாநிலத்தில் 2024ஆம் ஆண்டுக்கான, அரசுத் தலைவர் தேர்தலின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் வரும் மார்ச் 7ஆம் நாள் காலை 10மணியளவில் செய்தியாளர் கூட்டம் ஒன்றைப் பெய்ஜிங்கில் நடத்தவுள்ளது.
கடந்த சில நாட்களில், இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில், சீனப் பொருளாதாரம் உச்சத்தை அடைவது போன்ற ஒலியும் கலந்துள்ளது.
காசா பகுதியில் போர் நிறுத்தம் என்ற வேண்டுகோள் தொடர்பான வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது குறித்து மார்ச் 5ஆம் நாள் ஐ.நா. பொது பேரவையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
சீனாவின் ஷன் ஷி மாநிலத்தின் யூ லின் நகரில் அமைந்துள்ள டன் ஷியா புவியமைப்பு, சிவப்பு மண் அரிப்பு போன்று வித்தியாசமான தோற்றமளிக்கிறது. இயற்கையின் விரல் அடையாளம் போன்ற இந்த காட்சி வியக்கத்தக்கது.
காலத்துக்கு ஏற்ற காய்கறிகளைப் பறித்துச் சந்தைக்கு விநியோகிக்கும் வேலை ச்சுங் ட்சிங் மாநகரில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. வசந்தகாலச் சாகுபடி, விதைப்பு மற்றும் காய்கறி பறித்தல் வேலையை காலதாமதமின்றி செய்த விவசாயிகளுக்குப் பாராட்டுக்கள் ~
குவன் மிங் நகரில் குளிர்காலத்தைக் கடந்து சென்ற கடற்காக்கைகள், விரைவில் குவன் மிங் நகரிலிருந்து இடம்பெயர உள்ளன. குவன் மிங் மக்கள், இவற்றுடன் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கின்றனர்.
மார்ச் 5ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் நிலையான செய்தியாளர் கூட்டத்தில் பிலிப்பைன்ஸ் செனெட் அவை கடற்பகுதி சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மீது சீனாவின் நிலைப்பாடு பற்றி செய்தியாளர் கேள்வி கேட்டார்.
இந்தியாவிலிருந்து வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வணிக அமைச்சகம் திங்கள் அன்று தெரிவித்தது.
2023ஆம் ஆண்டில் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் சீனாவின் முதலீட்டுத் தொகை 3.3 இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, முந்தைய ஆண்டை விட 8.1 விழுக்காடு அதிகம் என்று 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் மார்ச் 5ஆம் நாள் காலை சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் யின் ஹே ஜுன் செய்தியாளர்களிடம் கூறினார்.
நவீனமயமாக்க தொழில் அமைப்பு முறையின் கட்டுமானத்தைப் பெரிதும் முன்னெடுத்து புதிய உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று சீன அரசுப் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2023ம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக சீரான வளர்ச்சி பெற்றுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 1.26 கோடி கோடி யுவானைத் தாண்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகரித்தது.
ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை வழியாக மார்ச் 3ஆம் நாள் 17 ஆயிரத்து 289 பயணிகள் பயணித்துள்ளனர். இயங்க துவங்கிய பிறகு, பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. பயணிகளின் ஓட்டம் தொடர்ந்து உயர்ந்த நிலையை நிலைநிறுத்தியுள்ளது என்று சீனாவின் இருப்புப் பாதை சர்வதேச நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது.
சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா இரத்து கொள்கை தொடர்ந்து விரிவாக்குவதோடு, சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலதிக வெளிநாட்டு நண்பர்கள் சீனாவுக்கு வருவதற்கு சீனா, வரவேற்பு தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான சுற்றுலா சூழ்நிலையை வழங்க அரசு தொடர்ந்து பாடுபடும்
அமெரிக்க வணிகச் சங்கத் தலைவரின் தலைமையிலான குழுவின் சீனப் பயணம் பற்றிய கேள்விக்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 4ஆம் நாள் பதில் அளித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பள்ளியின் 2024 வசந்த பருவ இளம் மற்றும் நடுத்தர வயது அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு மார்ச் 1ஆம் நாள் தொடங்கியது. இளம் அதிகாரிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான புதிய சக்தியாகவும், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோசலிச பணிகளை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் உள்ளனர் என்றும், புதிய பயணத்தில் இளம் அதிகாரிகள் உண்மையான நோக்கம் மற்றும் பணிகளை மனதில் வைத்து, வரலாற்றின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்றும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 2ஆவது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் மாலை 3மணியளவில் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது.
சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் காலை துவங்கி, மார்ச் 11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும். 7 நாட்கள் நீடிக்கும். இக்கூட்டத்தொடரில் மொத்தம் 3 முழுமையான கூட்டங்கள் நடைபெறவுள்ளது என்று இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் லோ சின் ஜியான் விளக்கிக்கூறினார்.
ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பின் சில உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து ரஷியா தனது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை குறைக்கும். இந்நிலையில் அந்நாட்டின் தினசரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவு மொத்தமாக 4லட்சத்து 71ஆயிரம் பீப்பாய்கள் குறைக்கப்படும் என்று ரஷிய துணைத் தலைமை அமைச்சர் அலெக்சாண்டர் நோவாக் மார்ச் 3ஆம் நாள் தெரிவித்தார்.
அமெரிக்காவின் சி.என்.என் தொலைகாட்சி நிறுவனம் மார்ச் 2ஆம் நாள் வெளியிட்ட புதிய புலனாய்வின்படி, காசா பகுதிக்கு மனித நேய நிவாரணப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் தடை செய்து வருகிறது.
2024ம் ஆண்டின் குவாங் ஷி வசந்தகால கரிமத் தேயிலை பறிக்கும் நடவடிக்கை அண்மையில் குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷோ பிங் வட்டத்திலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் தொடங்கியது.
மொத்தம் 1600 மீட்டர் நீளம் கொண்ட ஜின் ச்சோ பாலம், கட்டியமைக்கப்பட்டு வருகிறது. பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் இதில் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலை நாடுகள் ரஷியாவுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷியா ஒரே மாதிரியான நடைமுறையில் பதிலடி அளிக்கும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் 2ஆம் நாள் தெரிவித்தார்.
பிப்ரவரி 26ஆம் நாள் முதல் மார்ச் 2ஆம் நாள் வரை உலக வர்த்தக அமைப்பின் 13ஆவது அமைச்சர் நிலை கூட்டம் அபுதாபியில் நடைபெற்றது. சீனாவின் பிரதிநிதிக்குழு இக்கூட்டத்தில் பேச்சுவார்த்தையையும் ஒத்துழைப்பையும் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றியதுடன், அனைத்து கலந்தாய்வுகளிலும் கலந்துகொண்டு, கூட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.
இந்தியாவின் செய்தி ஊடகம் தைவான் பிரதேசத்தின் வெளிவிவகாரத் துறைப் பொறுப்பாளரிடம் பேட்டி காண்பது பற்றி இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் கருத்துத் தெரிவித்தார்.
பெய்ஜிங் நேரத்தின் படி மார்ச் 2ஆம் நாள் மதியம் 1:32 மணிக்கு, சென்செள 17 எனும் விண்கலத்தின் விண்வெளிவீரர்கள், அறையிலிருந்து வெளியே வந்து சுமார் 8 மணி நேரம் பல்வேறு ஆய்வுப் பணிகளை நிறைவேற்றி பாதுகாப்பாக வென்தியென் என்னும் ஆய்வு கலத்துக்குத் திரும்பினர்.
சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் செல்லிடபேசி மூலம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் உச்ச வரம்பை ஆயிரம் அமெரிக்க டாலரிலிருந்து 5 ஆயிரம் டாலராக உயர்த்தும்.
7வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் பங்கெடுக்கும் தொழில் நிறுவனங்கள் கையொப்பமிட்ட அரங்குகளின் நிலப்பரப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் சதூர மீட்டரைத் தாண்டியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில், கிட்டத்தட்ட 30ஆயிரம் அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். சுமார் 20லட்சம் பேர் வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.
வசந்த விழா விடுமுறையின் பாதிப்பில், சீனாவில் தயாரிப்புத் தொழிலின் உற்பத்தி குறிப்பிட்டளவில் தணிவடைந்து இருந்தாலும், தயாரிப்புத் தொழிலின் சந்தைத் தேவை ஒப்பீட்டளவில் நிதானமாக உள்ளது.
ஐ.நா.வின் மனித உரிமை செயற்குழுவின் 55ஆவது கூட்டத்தொடரில், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் நிலைமை குறித்து ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான அலுவலகம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் சென் சூ, பிப்ரவரி 29ஆம் நாள் சீனாவின் நிலைப்பாட்டை விரிவாக எடுத்துரைத்தார்.
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் டாச்சோ நகரில் அமைந்துள்ள ஒரு நெசவுத் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சு துணி பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
வசந்தகாலத்தில் சீனாவின் ஹூச்சோ நகருக்குச் சென்றால், இத்தகைய அழகான காட்சியைக் கண்டுரசிக்காலம். உள்ளூர்வாசிகளும் சுற்றுலா பயணிகளும் அங்குள்ள இளஞ்சிவப்பு பிளம் மலர்களால் ஈர்க்கப்படுகின்றனர்.
2023ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கையைச் சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்டது.
இந்திய கடற்படை குஜராத் கடற்கரையில் ஒரு படகில் இருந்து சுமார் 3,300 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியதாகவும், ஐந்து பேரைக் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு, பிப்ரவரி 29ஆம் நாள் நடத்திய கூட்டம் ஒன்றில், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடருக்கு சீன அரசவை, ஒப்படைக்கும் அரசு பணியறிக்கை விவாதிக்கப்பட்டது.
சீனாவின் 2023ஆம் ஆண்டு தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிபர அறிக்கை ஒன்றை சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்டது.
78ஆவது ஐ.நா. பாதுகாப்பவையின் சீர்திருத்தம் பற்றிய அரசுகளிடையே பேச்சுவார்த்தை அமைப்புமுறையின் கூட்டுத் தலைவரும், ஐ.நா.வுக்கான குவெய்த் நிரந்தரப் பிரதிநிதியுமான பனாய், ஐ.நா.வுக்கான ஆஸ்திரிய நிரந்தரப் பிரதிநிதி அலெக்சாண்டர் மார்ஷிக் ஆகியோரைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பிப்ரவரி 28ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார்.
28ஆம் நாள் சீன வணிக அமைச்சகம் நடத்திய அன்னிய முதலீட்டு நிறுவன வட்டமேசை கூட்டத்தில் வெளியிட்டப்பட்ட தகவலின்படி, வெளிநாட்டு முதலீட்டிற்கான 24 நடவடிக்கைகளில் பெரும்பாலானவை நன்கு செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளின் செயல்பாட்டை விரைவுபடுத்துதலை ஊக்குவிக்கவும், செயலாக்க நிலையின் விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளவும், அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கான கொள்கை நன்மைகளை மேம்படுத்தவும், சீன வணிக அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றும்.
இது இயற்கையின் அதிசயத்தக்க காட்சி. இது ஒளி மற்றும் நிழலின் கலை படைப்பு. நம் வாழ்நாளில் குறைந்தபட்சம் இத்தகைய பள்ளத்தாக்கிற்கு வந்து இயற்கை அழகைக் கண்டுரசிக்க வேண்டும் அல்லவா~
சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் 28ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டின் தைவானுக்கான பணிக் கூட்டம் பிப்ரவரி 22, 23ஆம் நாளில் பெய்ஜிங்கில் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
சிரியாவின் மனித நேய நிலைமை குறித்து ஐ.நா.பாதுகாப்பு அவையில் பிப்ரவரி 27ஆம் நாள் வெளிப்படையான கூட்டம் ஒன்று நடைபெற்றது. பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலால் ஏற்பட்ட பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். சிரிய பிரச்சினைகளை அரசியல் மூலம் தீர்ப்பதை முன்னேற்ற வேண்டும்.
பள்ளியின் பனி மூடிய விளையாட்டுத் தளத்தில் குழந்தைகளிடையில் ஒரு கால்பந்து போட்டி நடைபெற்றது. விளையாட்டினால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
14வது சீனக் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா பிப்ரவரி 27ம் நாளிரவு சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹுலுன்பேர் நகரில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் பரந்த வலைப்பின்னல் மூலம் இந்தியாவில் தேர்தல் விழிப்புணர்வை மேம்படுத்தும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 26ஆம் நாள் காணொளி வழியாக, ஐ.நா மனித உரிமைகள் செயற்குழுவின் 55ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர் நிலை மாநாட்டின் போது, சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவ், உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குனர் இவேலாவை 25ஆம் நாள் சந்தித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர் நிலை மாநாட்டின் போது, சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவ், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் தையை 26ஆம் நாள் சந்தித்தார். இந்த மாநாட்டில் நடைமுறை சாதனைகளைக் கூட்டாக ஊக்குவிப்பது, பரஸ்பர அக்கறை கொண்ட பலதரப்பு மற்றும் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சனைகள் ஆகியவை குறித்து, இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். சீனா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பது, தைவான் தொடர்பான பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சனைகள் ஆகியவை குறித்து சீனாவின் கவலைகள் பற்றியும், வாங் வென்டாவ் தெரிவித்தார்.
“அடுத்து சீனா ’இன்னும் சீனா!” சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2023ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழிற்துறை மற்றும் வணிகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் தொழிற்துறை மற்றும் வணிக நண்பர்களின் கூற்றை மேற்கோள் காட்டி, உலகச் சந்தையில் சீனாவின் வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறையில், சீனாவில் பல நுகர்வுத் தரவுகள் 2019ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளன. இதன் தொடர்பில் சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என்னும் சீன ரென்மின் பல்கலைக்கழகமும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்களில் 93.1 சதவீதமானோர் சீனப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் உள்ளார்ந்த திறனை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
பிப்ரவரி 25ஆம் நாள் உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது "சீனத் திட்டம்" வட்டமேசை உயர் மட்ட மன்றக்கூட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்றது. சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவோ இந்த மன்றத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதிகளைச் சீனா நடைமுறைப்படுத்துவது பற்றிய அமெரிக்காவின் அறிக்கைக்குச் சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவித்தது.
பிப்ரவரி மற்றும் மார்ச் திங்களில் பூக்கும் கோல் மலர்கள், பல்வேறு இடங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஈர்த்து, உள்ளூர் சுற்றுலா துறைக்கு உந்து சக்தியை ஊட்டுவதோடு, பொருளாதார வருமானத்தையும் அதிகரித்துள்ளன.
சீனாவின் பல்வேறு இடங்களில் வசந்தகால விவசாய வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு நவீன தொழில் நுட்பம் மற்றும் இயந்திரங்கள் பெரும் உதவி அளிக்கின்றன.
ரஷிய-உக்ரைன் மோதல் தொடுக்கப்பட்ட 2வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரஷியா மீதான 13ஆவது சுற்று தடைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் பிப்ரவரி 23ஆம் நாள் அறிவித்தது.
புதிய சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் கதார் தலைநகர் தோஹாவுக்கு இஸ்ரேல் பிரதிநிதிக்குழுவை அனுப்பும்.
ஐ.நாவின் 78வது பொது பேரவையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், அண்மை கிழக்கு பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரண மற்றும் பணி முகமையின் இயக்குநருக்கு கடிதம் அனுப்பினார்.
வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சனிக்கிழமையன்று டிராக்டர் கவிழ்ந்து குளத்தில் விழுந்ததில், குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
மார்ச் 6ஆம் நாள் முதல், சீனாவின் ஷி அன், ட்சிங் தாவ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு, ஹாங்காங் மற்றும் மக்கௌவில் பயணம் மேற்கொள்வதற்கான தனிநபர் ஒப்புதல் வழங்கப்படும்.
மனிதரை ஏற்றிச்செல்லும் புதிய தலைமுறை விண்கலத்திற்கு மெங்சோ எனவும் சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும் லேண்டருக்கு லான்யுயெ எனவும் பெயர் சூட்டப்பட்டது.
இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் இதுவரை 15,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
சீன வணிகத்துறை அமைச்சகம் பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி, கடந்த ஜனவரி திங்களில் சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 4588 ஆகும்.
நடப்பாண்டில், சீனாவின் பெருநிலப்பரப்பில் மாநிலங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவை வெளிநாட்டு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு பாலம் அமைக்க சீன வெளியுறவு அமைச்சகம் உதவி அளிக்கும்.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் 37ஆவது அமைச்சர் நிலை கூட்டம் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் பிப்ரவரி 22ஆம் நாள் நிறைவடைந்தது.
பாலஸ்தீனத்தின் உரிமைப் பிரதேசத்தை இஸ்ரேல் கைப்பற்றிய பிரச்சினை குறித்து ஐ.நா சர்வதேச நீதிமன்றம் நடத்திய கேட்டறிதல் கூட்டத்தில் இப்பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாட்டைச் சீனப் பிரதிநிதி விளக்கினார்.
பாரம்பரிய புத்தாண்டின் முதலாவது திங்களில் நெருப்பு நடனம் ஆடுவது, நீண்டகால வரலாறு உடைய ஒரு நாட்டுப்புற நிகழ்ச்சி. இதுவும், சீனாவின் குவாங் டோங் மாநிலத்தின் மே ச்சோ நகரின் பொருள் சாரா மரபுச் செல்வங்களில் ஒன்றாகும்.
மிளகாய், செலரி, தக்காளி முதலிய காய்கறிகளின் செடிகளை வளர்க்கும் மையத்தில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 6666 ஹெக்டர் நிலப்பரப்புக்கான காய்கறிகளின் செடிகள் இந்த மையத்தில் வளர்க்கப்பட முடியும்.
பிப்ரவரி 22ஆம் நாள் உள்ளூர் காவற்துறை வெளியிட்ட தகவலின்படி, வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் கைபர் பகுதியில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்கியதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 22 ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில், தைவானுக்கான ஆயுத விற்பனை பற்றிய திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தார்.
புதிதாக விரைவாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே பிரிக்ஸ் நாடுகள், பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சர்வதேச அலுவல்களில் நிலைத் தன்மை மற்றும் நேர்மறையான ஆற்றலாகச் செயல்படுகின்றன
சூடான் ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் 5 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களுக்கு நாள்தோறும் ஒரு முறை மட்டுமே போதுமான உணவு கிடைப்பதாக ஐ.நாவின் உலக உணவு திட்ட ஆணையத்தின் சூடான் திட்டப்பணியின் தலைவர் எடி ரோவ் தெரிவித்தார்.
நுண்ணறிவு இயந்திரமயமாக்கப் பணிமனையில், தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு சாரா தொழில் நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்தி, வளர்ச்சி முறையை மாற்றி வருகின்றன.
பட்டாசுகள் வெடிப்பது, டிராகன் ஊர்வலம் முதலிய நிகழ்ச்சிகள் அண்மையில் சீனாவின் நன்னிங் நகரில் கோலாகலமாக நடைபெற்றன. பல்வேறு சாலைகளில் சென்ற நூற்றுக்கணக்கான டிராகன்களின் நடனம், அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது.
ஈரான் மற்றும் இலங்கையின் பல்வேறு துறைகளிலான இருதரப்பு உறவை முன்னேற்றும் விருப்பத்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிர்-அப்துல்லாஹியனும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
2023ஆம் ஆண்டின் ஜூலை முதல், 2024ஆம் ஆண்டின் ஜனவரி இறுதி வரை, சீன வணிக அமைச்சகம் 16 வெளிநாட்டு நினுவனங்கள் தொடர்பான வட்டமேசை கூட்டங்களை நடத்தி, 300க்கும் மேற்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துள்ளதாக சீன வணிக அமைச்சகம் தெரிவித்தது.
பிப்ரவரி 21ஆம் நாள் முற்பகல், 45ஆவது தொகுதி கப்பல் பயணப் பாதுகாப்பு படைக்குப் பதிலாக, சீனாவின் கடல் படையின் 46ஆவது கப்பல் தொகுதி, குவாங்டொங் மாநிலத்தின் சன்ஜியாங் துறைமுகத்திலிருந்து ஏதென் வளைகுடா மற்றும் சோமாலிய கடல் பரப்புக்குப் புறப்பட்டு சென்றது.
பல சுற்று பேச்சுவார்த்தைகளின் மூலம், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி (ஷெரீப்), மக்கள் கட்சி ஆகியவை பிப்ரவரி 20ஆம் நாளிரவு தலைநகர் இஸ்லாமாபாத்தில் உடன்பாட்டை எட்டி, கூட்டணி அரசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
சீனாவின் நன் ஜிங் சர்வதேச பிளம் மலர் கண்காட்சி அண்மையில் நன் ஜிங் நகரில் தொடங்கியது. இக்கண்காட்சி, மார்ச் 15ம் நாள் வரை நீடிக்கும். பயணிகள், பிளம் மலர்களைக் கண்டுரசிப்பதுடன், கார்னிவல், பிளம் பண்பாட்டு முதலிய 6 வகைகளைச் சேர்ந்த 30 நடவடிக்கைகளில் பங்கெடுக்கலாம்.
காய்கறி சாகுபடி தொழில் வளர்ச்சிக்குத் துணை புரியும் வகையில், பொலிவுறு கூடாரம் ருய் ச்சாங் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெருந்தகவல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப ஆதரவுடன், ஆண்டு முழுவதும் காய்கறி சாகுபடி செய்ய முடியும்.
கடந்த ஆண்டு சீன வாகனங்களின் ஏற்றுமதி எண்ணிக்கை, 49 இலட்சத்து 10 ஆயிரத்தை எட்டியது. உலகளவில் முதல் முறையாக முதலிடம் பிடித்தது. அதே வேளை சுங்க வரியைத் தவிர வேறு வழிமுறைகளின் மூலம் சீனாவின் நுண்மதி நுட்ப வாகனங்கள் மற்றும் தொடர்புடைய உதிரிபாகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா கருத்தில் கொண்டது.
பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட புதிய மோதல் பற்றிய வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா ஐ.நா.விடம் தாக்கல் செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் 19ஆம் நாள் செய்தி வெளியிட்டது.
இலங்கையில் தனியார் முதலீட்டுடன் கடல்சார் காற்றாலை ஆற்றல் திறனை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 20ஆம் நாள், சிங்கப்பூர் விமான கண்காட்சி சாங்கி கண்காட்சி மையத்தில் தொடங்கியது. இதில் இரண்டு சி919 விமானங்கள் மற்றும் மூன்று ஏ.ஆர்.ஜே21 விமானங்கள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, சீனாவின் வணிக விமான வளர்ச்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு காட்டியுள்ளன.
இவ்வாண்டின் வசந்த விழாவின் போது, பிங் யோவ் நகரில், தேசியக் கலை நிகழ்ச்சிகள், விளக்கு கண்காட்சி, பொருள் சாரா மரபுச் செல்வச் சந்தை முதலியவை நடத்தப்பட்டுள்ளன.
சீனக்கம்யூனிஸட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 60ஆவது மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டது பற்றிய நிலைமையை, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
பாகிஸ்தான் பொது தேர்தல் பொதுவாகத் தடையின்றி நடைபெற்றதற்கு சீனத் தரப்பு வாழ்த்து தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் 19ஆம் நாள் தெரிவித்தார்.
இந்தியப் படைவீரர்கள் மாலத்தீவிலிருந்து வெளியேறுவதற்கு இரண்டு தேதிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாலத்தீவு நாட்டு அரசுத் தலைவர் முகமது முயிசு 18ஆம் நாள் தெரிவித்தார்.
சீன அரசவை உறுப்பினரும் பொதுப் பாதுகாப்பு அமைச்சருமான வாங் சியாவ் ஹோங் பிப்ரவரி 18ஆம் நாள் வியன்னாவில் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்ட்ரோ மேயர்காஸுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
பிப்ரவரி 17ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, சீனாவின் சிறப்பு அமர்வில் முக்கிய உரையை ஆற்றி, தைவான் பிரச்சினைக்கான கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
காசா பகுதியில் சுகாதார நிலைமை தீவிர நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மருத்துவச் சிகிச்சைத் தேவை அதிகரித்து வரும் அதே வேளையில், பயன்படுத்தப்படக் கூடிய மருத்துவ மூலவளங்கள் மென்மேலும் குறைந்து வருகின்றன.
2024ம் ஆண்டின் வசந்த விழா விடுமுறையில் சீனாவில் 47.4 கோடி சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாடு கடந்த பயணங்களின் எண்ணிக்கை 36 இலட்சத்தை எட்டியது. எனவே வரலாற்றில் மிகவும் சுறுசுறுப்பான வசந்த விழா விடுமுறையாக இவ்வாண்டு விடுமுறை, இருக்கக் கூடும்.
இன்று யூ ஷுயே என்ற சூரிய பருவ நாள். சீனாவின் முக்கிய தானிய வயல்களில் வசந்தகால விதைப்பு வேலை தொடங்கியது. குறிப்பாக தென்சீனப் பகுதியில் நெல் விதைப்பு மற்றும் கோதுமை மேலாண்மை வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இணைய யூனியன் கடன் தீர்வு நிறுவனம் மற்றும் சீன யூனியன் பே கையாண்ட இணைய செலுத்துதல் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சீன மக்கள் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.
மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பிப்ரவரி 17ஆம் நாள் ஜெர்மனி தலைமையமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸைச் சந்தித்துரையாடினார்.
ஃபூஜியன் கடற்காவற்துறை பணியகம் கடல்சார் சட்ட அமலாக்கச் சக்தியை வலுப்படுத்தி, சியாமன், குவாஞ்சோ மற்றும் ஜின்மென் ஆகிய கடல் பகுதியில் வழக்கமாக சட்ட அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்ளும்.
ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்பு, வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்புக்கான காலநிலை மீதான முதலீட்டு திரட்டல் என்ற தலைப்பில் உயர்மட்ட கூட்டத்தை, ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூட்டாக நடத்தின.
சீன இரயில்வே குழுமத்தைச் சேர்ந்த ஷாங்காய் இரயில்வே நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டின் பிப்ரவரி 17ஆம் நாள் வரை, 8 நாட்கள் நீடித்த சீனாவின் வசந்த விழா விடுமுறை காலத்தில், யாங்சி கழிமுகப்பிரதேசத்தில் பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 70 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. நாளுக்கு சுமார் 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேலான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பிப்ரவரி 17ஆம் நாள் மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு "கொந்தளிப்பான உலகில் நிதானமான சக்தியை உறுதியாக இருப்பது" என்ற தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
பிப்ரவரி 17ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாட்டில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
சதுப்புநிலப் பூங்காவில் அன்னப் பறவைகள், நாரைகள் முதலியவை ஓய்வு எடுத்த காட்சி~ தட்பவெப்பம் உயர்வுடன் இந்த பறவைகள், வட திசையை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன.
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ஆ பா என்ற திபெத் மற்றும் ஜியாங் இனத் தன்னாட்சிச் சோவில் அமைந்துள்ள மியாலோ காட்சித் தலக் காட்டில் இயற்கையின் ஓவியத்தைக் கண்டுரசியுங்கள்~
சீனாவின் 14வது தேசியக் குளிர்கால விளையாட்டுப் போட்டி அண்மையில் உள்மங்கோலியாவின் ஹுலுன்பேல் நகரில் துவங்கியது. தீபம் ஏற்றப்பட்டதற்குப் பிறகு வியக்க வைக்கும் இசை வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
சீன மக்களுக்கு வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், உயர்வேக ரயிலில் கிராமப்புறப் பகுதியில் பயணித்த அனுபவத்தையும்,. சீனப் பயணத்தின் மூலம், சீன மக்களின் கடின உழைப்பை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
வசந்த விழாவையொட்டி மக்காவ் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் பல்வகை சிறப்பான கொண்டாட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மக்காவில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பிப்ரவரி 16ஆம் நாள் மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கெனைச் சந்தித்துப் பேசினார்.
பயங்கரவாத அறைகூவல்களை சமாளிக்க ஒத்துழைப்புடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தை ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதியான ஜாங் ஜுன் 15ஆம் நாள் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து ஐ.நா. பாதுகாப்பவையின் வெளிப்படையான கூட்டத்தில் வலியுறுத்தினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, மனித குலப் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம், சமத்துவமான மற்றும் ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கத்தின் உருவாக்கம் ஆகியவை குறித்து, சீனாவின் கருத்துகளை எடுத்துக்கூறவுள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 60வது மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார்.
சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் 2024ஆம் ஆண்டு அமைச்சர் நிலை கூட்டமும், இந்நிறுவனம் நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு நடவடிக்கையும் 13, 14 ஆகிய நாட்களில் பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.
தென்கொரிய வெளியுறவு அமைச்சகம் 14ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அன்று ஐ.நாவுக்கான இரு நாடுகளின் பிரதிநிதி நிறுவனங்கள் ஆவணங்களைப் பரிமாற்றி, தூதர் நிலை தூதாண்மையுறவு நிறுவுவதை தீர்மானித்துள்ளன.
மக்கள் வாழ்வதற்கு ஏற்ற, தொடரவல்ல, பட்டினி மற்றும் போர் சீற்றம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் வேண்டுகோள் விடுத்தார்.
மனிதாபிமான உதவியானது, நிர்ப்பந்தத்தை திணிப்பதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், அரசியல் நிபந்தனைகள் எதுவும் இணைக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
ஆர்க்டிக் கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகள் இக்கவுன்சில் உள்ள பணிகளில் பங்கெடுப்பதை மீட்கும் முன், இக்கவுன்சிலுக்கு ஆண்டு கட்டணம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த ரஷியா தீர்மானித்தது.
தனியார் பொருளாதாரத்தின் வளர்ச்சி சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் தொடர்புடைய தரப்புகளுடன் மேற்கொள்ளும்.
ஈரானிய தேயிலை இறக்குமதியாளர்கள் இலங்கையில் இருந்து பெறும் தேயிலையின் அளவை, அதன் தற்போதைய 50 லட்சம் அமெரிக்க டாலர்களில் இருந்து 1 கோடியாக குளிர்கால மாதங்களில் இரட்டிப்பாக்க முன்மொழிந்துள்ளனர்.
பிப்ரவரி 2ஆம் நாள் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 573.6 கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 62247 கோடி டாலர்களாக இருந்தது.
திபெத்தின நாட்காட்டியின் புத்தாண்டுடன், வசந்த விழாவும் வந்துள்ள சூழலில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு இன மக்கள் மகிழ்ச்சியான விழா சூழலில் மூழ்கியுள்ளனர்.
டிராகன் ஆண்டு சி.ஜி.டி.என். சூப்பர் இரவு கலை நிகழ்ச்சி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது! இணைப்பைச் சுட்டி, நேரடி ஒளிபரப்பு மூலம் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசியுங்கள்!
பிப்ரவரி 9ஆம் நாள் சீனச் சந்திர நாட்காட்டியின்படி டிராகன் ஆண்டின் புத்தாண்டுக்கு முந்தைய இரவாகும். இந்நாளில் இரவு 8 மணிக்கு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த வசந்த விழா கலை நிகழ்ச்சி உலகப் பார்வையாளர்களுக்கு ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது.
சந்திர நாட்காட்டியின் டிராகன் ஆண்டை முன்னிட்டு, வெளிநாடு மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், தொலைபேசி, கடிதம் முதலிய வழிகளில் சீன அரசுத் தலைவருக்கும் சீன மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஃபுகுஷிமாவின் முதலாவது அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு நீரை தூய்மைப்படுத்தும் சாதனத்தில் கசிவு ஏற்பட்டது காரணமாக, கடந்த சில நாட்களில் சுமார் 5.5டன் கதிர்வீச்சு நீர் வெளியேற்றப்பட்டது
இந்தியாவில் 2025-க்குள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ளும் விதம் 20 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு கொண்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் சார்ந்தியங்கும் ஜிபிஎஸ் வழிமுறையைப் பயன்படுத்தி சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முறை நடைமுறைக்கு வர உள்ளது.
அமெரிக்கா, கென்யா, ஸ்விட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷியா, கசகஸ்தான், பிரேசில், அர்ஜென்டீனா, உருகுவே, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், எத்தியோப்பியா, தாய்லாந்து, இந்தோனேசியா, லாவோஸ், கம்போடியா முதலிய நாடுகளில், வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கைகளை சீன ஊடகக் குழுமம் மேற்கொண்டுள்ளது.
பிப்ரவரி 7ஆம் நாள், சீனா ஊடகக் குழுமம் 2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்தாவது ஒத்திகையை நிறைவேற்றியது. பாடல்கள், நடனங்கள், குறுக்கு பேச்சுகள், நாடகங்கள், தற்காப்புக் கலைகள், மந்திரத் தந்திர நிகழ்ச்சிகள், கூத்து கலைகள் முதலிய பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் சீராக நிகழ்த்தப்பட்டன. மைய அரங்கம், நான்கு பிரிவு அரங்கங்களுடன் நன்றாக ஒருங்கிணைந்து, மகிழ்ச்சி மிக்க சூழ்நிலையை காட்டியுள்ளது. இதுவரை, சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி தயாராக உள்ளது. இந்த கலாச்சார விருந்தில் பங்கேற்க உலகில் உள்ள சீன மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
பிரான்ஸில் நாய் குட்டிகளுக்கான ஒரு சிறப்பு யோகா வகுப்பு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. யோகா ரசிகர்கள், தங்கள் செல்ல நாய்களுடன் யோகா பயிற்சி செய்து மகிழலாம்.
சீனப் பாரம்பரிய புத்தாண்டான வசந்த விழாவை முன்னிட்டு, அமெரிக்கா, பிரான்ஸ், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பல விதமான கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
இரு நாட்டு ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை மற்றும் கொள்கைகள், 20 நாடுகள் குழுவின் நிதி மற்றும் நாணய ஒத்துழைப்பு, வளரும் நாடுகளின் கடன், தொழில்துறை சார் கொள்கை முதலியவை குறித்து இரு தரப்பும் ஆழந்த முறையில் பரிமாற்றம் மேற்கொண்டன.
குடியேற்ற விவகாரத்தில் அமெரிக்க அரசுக்கும், டெக்சாஸ் மாநில அரசுக்கும் இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை, தேசிய விவாகரத்து என்றுகூட சிலர் விமர்சிக்கின்றனர்.
சீனாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான வெளியுறவு அமைச்சர் நிலையிலான 3ஆவது சுற்று நெடுநோக்கு பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
பிப்ரவரி 6ஆம் நாள் சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியும் துணை அமைச்சருமான வாங் ஷு வென், அமெரிக்க துணை வணிக அமைச்சர் மரிசா லாகோ ஆகியோர் காணொளி மூலம் தொடர்புகொண்டு, சீன-அமெரிக்க வணிக வர்த்தகச் செயற்குழுவின் முதல் துணை அமைச்சர் நிலை கூட்டத்திற்கான ஆயத்தப் பணி, ஒன்றுக்கு ஒன்று அக்கறைக் கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள் ஆகியவை குறித்து வெளிப்படையான மற்றும் ஆழமான தொடர்புகளை நடத்தினார்.
உள்ளூர் நேரப்படி, பிப்ரவரி 6ஆம் நாள், ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் காணொளி வழியாக சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பிப்ரவரி 6ஆம் நாள் இந்தியாவின் மத்திய மாநிலத்திலுள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று இந்திய புதுடில்லி தொலைக்காட்சி நிலையம் தெரிவித்தது.
சி ஜி டி என் நிலையத்தின் சூப்பர் இரவு கலைநிகழ்ச்சிகளில் சீனாவின் பாரம்பரிய நாடகம் மற்றும் குங்ஃபூ நிகழ்ச்சியின் ஒத்திகை காட்சி உங்களுக்காக~ இந்நிகழ்ச்சிகள் பிப்ரவரி 9ம் நாளிரவு 7:30 மணியளவில் நேரலையின் மூலம் ஒளிபரப்பப்படும்.
உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத செலரிக்கீரை அறுவடை வேலை, சீனாவின் ஹாய்னான் மாநிலத்தின் லுங் ஜி கிராமத்தில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இவை சந்தையில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன.
, போக்குவரத்து சேவை உறுதி செய்தல் போன்றவற்றுக்காக, சீன நிதி அமைச்சகமும் போக்குவரத்து அமைச்சகமும் 6ஆம் நாள் 14கோடியே 10இலட்சம் யுவான் அவசர நிதித் தொகையை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, நோர்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பன் பார்ட் எட்டுடன், பிப்ரவரி 5ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிப்ரவரி 5ஆம் நாள் முதல், சீன ஊடகக் குழுமத்தின் டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பிரச்சாரக் காணொளி, அமெரிக்கச் சிஎன்என் இணையத்தின் வட அமெரிக்க உள்ளூர் அலைவரிசை, சர்வதேச வட அமெரிக்க அலைவரிசை முதலியவற்றில் பலமுறை ஒளிபரப்ப தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும், பார்வைகளின் எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் கடல் காவற்துறை சட்டத்தின்படி, பிப்ரவரி 5ஆம் நாள், ஹூவாங்யன் தீவில் ஊடுருவிய பிலிப்பைன்ஸ் கடல் காவற்துறையைச் சேர்ந்த கப்பல் ஒன்றை துரத்தி வெளியேற்றியது.
UNRWA நடுநிலையை உறுதிப்படுத்துகிறதா என்பதைப் பரிசீலனை செய்யும் வகையில், ஒரு சுதந்திர புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது என்று ஐ.நா 5ஆம் நாள் அறிவித்தது.
ஜனவரி 26ம் நாள் முதல் சீனாவின் வசந்த விழா பயணி போக்குவரத்து காலம் தொடங்கியது. 40 நாட்கள் நீடிக்கும் இக்காலத்தில் 900 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்படும். ஊருக்குத் திரும்பும் வழியில் எங்கெங்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு சூழ்நிலை காணப்படலாம்.
வூ ஹான் நகரில் அமைந்துள்ள மே லின் பூங்கா, பிளம் மலர்களைக் கண்டுரசிப்பதற்கான புகழ் பெற்ற இடமாகும். குறிப்பாக, இம்மலர்களுக்கு முன்பு பெய்த பனி கூடுதல் எழில் ஊட்டியுள்ளது.
ஐ.நா.வின் உயர் நிலை அதிகாரிகள், சீன மக்களுக்கு நல்வாழ்த்துக்களையும், டிராகன் ஆண்டில் உலகில் அமைதி மற்றும் செழுமை பெறட்டும் என்ற வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
சீனாவும் பிரேசிலும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் முதல், வணிகம், சுற்றுலா, உறவினர் சந்திப்பு ஆகியவற்றுக்காக பயணம் மேற்கொள்ளும் மற்ற தரப்பின் குடிமக்களுக்கு 10 ஆண்டுகளான கால வரம்பு கொண்ட விசா வழங்கப்படும். தேவையெனில் விசா காலம் நீட்டிப்பு செய்யப்படும்
உயர் மேடை முரசு, தாவு நடைக்கோல், சீனக் குத்துச் சண்டை உள்ளிட்ட பொருள் சாரா மரபுச் செல்வங்களின் அரங்கேற்ற நிகழ்ச்சி அண்மையில் ஷன் ஷி மாநிலத்தின் யுன் செங் நகரில் துவங்கின. இவை, பிப்ரவரி 17ம் நாள் வரை பயணிகளுக்காக அரங்கேற்றப்படவுள்ளன.
சீனப் பாரம்பரிய புத்தாண்டையொட்டி, நண்டு பிடிப்பு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. சீனாவின் நண்டு ஊர் என அழைக்கப்படும் சீஹொங் வட்டத்தில் நண்டு தொழிலால் ஆண்டுக்கு சுமார் 50 கோடி யுவான் வருமானம் கிடைக்கிறது.
ரஷிய நெடுநோக்கு ஆய்வு மையத்தின் பொறுப்பாளர் பவல் ஸ்மேலோவ் ரஷிய சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்டு, மற்ற நாடுகளில் ரஷியாவில் சுற்றுலா சந்தைக்கு உள்ளார்ந்த ஆற்றல் பற்றிய ஆவணத்தை அறிமுகப்படுத்தினார்.
சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு முதலீட்டு ஒத்துழைப்பு சீராக வளர்ந்து வந்துள்ளது. அனைத்து தொழில்களிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு தொகை 1 லட்சத்து 4 ஆயிரத்து 185 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகரித்தது. இதில், நிதி துறை சாரா வெளிநாட்டு நேரடி முதலீட்டு தொகை 91 ஆயிரத்து 699 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டை விட 16.7 சதவீதம் அதிகமாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியை கூட்டாக கட்டியமைக்கும் நாடுகளில் சீன நிறுவனங்களின் நிதி துறை சாரா நேரடி முதலீட்டு தொகை 22 ஆயிரத்து 409 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டை விட 28.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு “வேளாண்மை, கிராமப்புறங்கள், விவசாயிகள்” ஆகிய மூன்று தரப்புகளின் பணிகளை வழிநடத்தும் வகையில், 12வது மத்திய அரசின் முதலாவது ஆவணம் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியிடப்பட்டது. கிராமப்புறங்களின் விரிவான புத்துயிர் பெறுதலை வலிமையான மற்றும் பயனுள்ள முறையில் முன்னேற்ற நெறிவரைபடத் திட்டம் இதில் முன்வைக்கப்பட்டது.
பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் ஹஜ்ஜா லஹிப், வளர்ச்சி ஒத்துழைப்பு அமைச்சர் ஜெனெட்ஸ் ஆகியோர் பிரசல்ஸில் உள்ள இஸ்ரேல் தூதரைச் அழைத்து, காசா பகுதியில் பெல்ஜியத்தின் வளர்ச்சி நிறுவனம் மீது இஸ்ரேல் நடத்திய தொக்குதலைக் கண்டித்தனர் என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 2ஆம் நாள் தெரிவித்தது.
லி ச்சுன் என்ற பருவ நாள் வருவதற்கு முன், சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள வயல்களில், வேளாண் பயிர்கள் மற்றும் பழ மரங்களின் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் விவசாயிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
பனி பெய்வது, புத்தாண்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்ற அர்த்தம் உண்டு. மாவட்டம், ஏரி மற்றும் மலைகளை பனி சூழ்ந்த இக்காட்சி, ஓர் அழகான ஓவியம் போல தோற்றமளிக்கிறது.
சிரியா மற்றும் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து, தொடர்புடைய தரப்புகள் பயனுள்ள முறையில் நெருக்கடி நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆன்டோனியோ குட்டரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் 3ஆம் தெரிவித்தார்.
சீன பாரம்பரிய பண்டிகையான வசந்த விழா நெருங்கி வருவதுடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், பிப்ரவரி 2ஆம் நாள் தியான்ஜினுக்கான இராணுவ படைகளைப் பார்வையிட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி மற்றும் மத்திய இராணுவ ஆணையம் சார்பில், சீன மக்கள் விடுதலை படை வீரர்கள், ஆயுதம் காவற்துறை வீரர்கள், இராணுவ பொது பணியாளர்கள், இருப்பு படையினர் அனைவருக்கும், அவர் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சீன ஊடகக் குழுமம் வழங்கிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரப்பரை நடவடிக்கை பிப்ரவரி 2ஆம் நாள் ஜெனீவாவிலுள்ள ஐ.நாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. சீனாவின் வசந்த விழாவைக் கொண்டாடும் சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சியைக் கண்டுரசிப்போம் என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சி வசந்த விழா பண்பாட்டின் மூலம் சர்வதேச மானுட பரிமாற்றத்தை விரைவுபடுத்துகின்றது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று வீரர்களைக் கொன்றதற்கு பதிலடியாக இந்த இராணுவ நடவடிக்கை நடத்தப்படுவதாக அமெரிக்க அரசு தெரிவித்தது.
ஹுவாங் யன் தீவு மற்றும் அதற்கு அருகிலுள்ள கடற்பரப்பு மீது சந்தேகத்துக்கு இடமில்லாத அரசுரிமையை சீனா கொண்டுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜப்பானில் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டின் ஒசாகா உலகப் பொருட்காட்சியின் சீனக் காட்சியகத்தின் கட்டமைப்புப் பணி பிப்ரவரி 2ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
2023ஆம் ஆண்டில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான மொத்தம் 15 வட்டமேசைக் கூட்டங்களை சீன வணிக அமைச்சகம் நடத்தி, அவற்றின் 300க்கும் மேற்பட்ட சிக்கல்களைத் தீர்த்துள்ளது என்றும், இதையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களைத் தொடர்ந்து தீர்க்கும் வகையில், சீன வணிக அமைச்சகம் மாதாந்திர வட்டமேசைக் கூட்டத்தை நடத்தும் என்றும், இந்த அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் பிப்ரவரி 1ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
1 கோடியே 82 இலட்சம் ஏமன் மக்களுக்குத் தேவையான அவசர மனித நேய உதவிகளை வழங்குமாறு ஐ.நா.வின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் பிப்ரவரி முதல் நாள் வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்தது.
கடல் மட்டத்திலிருந்து 5010 மீட்டர் உயரமுள்ள ஆறு உறைந்து நீல நிறத்தில் அழகிய தோற்றமளிக்கிறது. குளிர்காலத்தில் ஆயர்கள் ஆட்டுக் கூட்டத்தை மேய்த்தபடி, இப்பனி ஆற்றைக் கடந்து செல்வர்.
சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் விளம்பர காணொளி பிப்ரவரி முதல் நாள் கம்போடியாவின் சீம் ரீப்-அங்கோர் சர்வதேச விமான நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டது.
2023ஆம் ஆண்டு சீனாவின் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த மதிப்பு 6 லட்சத்து 57 ஆயிரத்து 543 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 10 விழுக்காடு அதிகமாகும்.
சீனாவின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான வசந்த விழா (சீனப் புத்தாண்டு) நெருங்கி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் அதனை வரவேற்பதற்கான பல்வகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உள்ளூர் நேரப்படி ஜனவரி 31ஆம் நாள், அன்று அறிவிக்கப்பட்ட ஃபெடரல் நிதி விகித முடிவு குறித்து, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பாவெல் உரை நிகழ்த்தினார். வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவெடுப்பதற்கு முன், பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதற்கான மேலதிக ஆதாரங்களை இவ்வங்கி கண்டுபிடிக்க வேண்டும். இப்போதைக்கு, மார்ச் கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கு "சாத்தியமில்லை" என்று தெரிவித்தார்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி முகாமுக்குத் தொடர்புடைய நாடுகள் நிதியுதவி வழங்கலை மீட்டெடுக்க வேண்டுமென ஜனவரி 31ஆம் நாள் ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.
சீன-வெளிநாட்டு மக்களின் தொடர்புக்கான வசதிமயமாக்க நடவடிக்கைகளைச் சீனா தொடர்ந்து மேம்படுத்தி, சீன மக்களின் வெளிநாட்டுப் பயணத்தின் பாதுகாப்பை பெரிதும் பேணிக்காக்கும்.
சீன இனங்களின் பொது சமூக உணர்வை உறுதியாக உருவாக்கி, புது யுகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இனப்பணியின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிப்பது என்ற பெயரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் முக்கியமான கட்டுரை, பிப்ரவரி 1ஆம் நாள் "ச்சியுஷி" இதழில் வெளியிடப்பட உள்ளது.
சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகம் ஜனவரி 31ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பெருநிலம் மற்றும் தைவான் தொடர்பான சமீபத்திய பரபரப்பான பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்கு செய்தி தொடர்பாளர் சென் பின்ஹுவா பதிலளித்தார்.
பாகிஸ்தான் முப்படையின் பொது விவகாரத் துறை ஜனவரி 30ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 29ஆம் முதல் 30ஆம் நாள் வரை, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்துவர் உள்ளிட்ட பல பயங்கரவாதிகள், பலூசிஸ்தான் மாநிலம் மற்றும் அருகிலுள்ள பகுதி மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
அண்மை கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி முகாமின் மனித நேயப் பணியைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.
சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் ஜனவரி 30ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, தேசிய அளவில் 73 ஆயிரம் முக்கிய பண்பாட்டுத் தொழில் துறையில் ஈடுபடும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2023ஆம் ஆண்டில், சீனப் பண்பாட்டுத் தொழில் நிறுவனங்களின் வருமானத் தொகை 12 இலட்சத்து 95 ஆயிரத்து 150 கோடி யுவானை எட்டியது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய பைடன் அரசு முடிவு செய்தது குறித்து பிளின்கன் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டுமென இரு அவைகள் கூட்டணி அன்று கோரிக்கை விடுத்துள்ளது.
தங்க முகமூடி, வெண்கலச் சிலை முதலியவை, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட அரிய தொல் பொருட்களாகும். அண்மையில் 363 தொல் பொருட்கள் ஷாங்காய் மாநகரில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவை முன்னிட்டு, டாங் ஷன் நகரின் லுவேன் நன் வட்டத்தில் மீன் பிடிப்பு பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கிலோவுக்கும் மேலான மீன்கள் பிடிக்கப்பட்டு, சுற்றியுள்ள மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி ஜோசப் போரெல் ஃபோண்டெல்ஸ், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் ஆகியோர் ஜனவரி 28ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர் என்று ஜனவரி 29ஆம் நாள் ஐரோப்பிய வெளியுறவுச் சேவை தெரிவித்தது.
2024ம் ஆண்டின் ஜனவரி 28ம் நாள், முழு சீனாவிலும் பிரதேசம் கடந்த பயணங்களின் எண்ணிக்கை, 19 கோடியே 30 இலட்சத்து 28 ஆயிரத்தை எட்டி, கடந்த மாதம் மற்றும் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே, 1.8 விழுக்காடு மற்றும் 17.7 விழுக்காடு அதிகரித்தது.
அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சியினர் 28ஆம் நாள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அலெசாண்ட்ரோ மயோர்காஸ் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
அண்மை கிழக்குப் பகுதிக்கான ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகள் நிவாரணம் மற்றும் பணி முகாமைச் சேர்ந்த பணியாளர்கள் கடந்த ஆண்டின் அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
2023ம் ஆண்டில், சீன-மத்திய ஐரோப்பிய தொடர்வண்டி(செங்து,ச்சொங்ஜிங்)மூலம் 5300 முறை ரயில் சேவை வழங்கப்பட்டது. மொத்தம் 4.3 இலட்சம் சரக்கு கொள்கலன்கள், இந்த இருப்புப்பாதை மூலம் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளன.
தேயிலைத் தோட்டத்தில் வெப்ப உயர்வுடன் பனி உருகி வருகிறது. உருகிய பனிநீர், தோட்டத்திலுள்ள பூச்சிகளை ஒழிக்கும் அதே வேளையில் தேயிலை மரங்களின் வளர்ப்புக்கும் துணை புரியும்.
ஈரானின் தென்கிழக்கு பகுதியிலுள்ள சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 27ஆம் நாள் நிகழ்ந்த தாக்குதலுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச கூட்டணியின் இருப்பு முடிவுக்கு வருவது பற்றி விவாதிக்கும் வகையில் ஈராக்கும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தின.
ஒரே சீனா என்ற கோட்பாடு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான 3 கூட்டறிக்கையை அமெரிக்கா பின்பற்றி, சீனாவின் சமாதான ஒன்றிணைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.
78வது ஐ.நா. பேரவையின் தலைவர் பிரான்சிஸ் ஜனவரி 27 முதல் 31 வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.
விண்வெளியில் சீன அச்சுறுத்தல் கோட்பாடு பற்றி அமெரிக்கா நீண்டகாலமாக பரப்புரை செய்து, சீனாவின் மீது அவதூறு பரப்பி வருகிறது என்பது, விண்வெளியில் தங்களது ராணுவ ஆற்றலை விரிவாக்கி, ராணுவ மேலாதிக்கவாதத்தை நிலைநிறுத்துவதற்கான சாக்குப்போக்கு என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் 26ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
2023ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஆர்.சி.இ.பி.ஒப்பந்தத்தின் இதர 14 உறுப்பு நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு 12இலட்சத்து 60ஆயிரம் கோடி யுவானை எட்டியது.
அமெரிக்கா முன்பு கோரியுள்ள கடமைகளாயினும், ஐரோப்பிய ஒன்றியம் தலைமை தாங்கவுள்ள கடமைகளாயினும், செங்கடலில் எவ்விதமான ராணுவ நடவடிக்கையிலும் ஸ்பெயின் பங்கேற்காது.
கனடாவின் ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பிரிட்டன் அரசின் முன்முயற்சியின் பேரில், கனடா மற்றும் பிரிட்டன் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் நேரப்படி ஜனவரி 25ஆம் நாள் கனடா வர்த்தக அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தாய்லாந்து துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான பாம்பியின் அழைப்பின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜனவரி 26ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை, தாய்லாந்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு ஒப்புக்கொள்வது தொடர்பாக, துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் 25ஆம் நாள் கையெழுதிட்டார். இத்தகவல் துருக்கியின் கூட்டறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
சீன தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் ஜனவரி 25ஆம் நாள் மாலை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி பணியகத்தின் தலைவரும் செய்தித்தொடர்பாளருமான வூசியென் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இலங்கை, தாய்லாந்துடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசின் தகவல் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் துவக்கத்தில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மூலம் மின்சார உற்பத்தித் திறன், நிலக்கரியைத் தாண்டி, உலகளவிய மொத்த மின்சார உற்பத்தித் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்கும்.
கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி விசா இன்றி பயணம் செய்வது குறித்த ஒப்பந்தம் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஜனவரி 25ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 9ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாட்டின் மக்கள் விசா இன்றி மற்றொரு நாட்டில் அதிகபட்சமாக 30 நாட்கள் பயணிக்கலாம். அவர்கள், சுற்றுலா, உறவினர்களைக் காணுதல், வணிகம் உள்ளிட்டற்றில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் முற்றுகையால், காசா பகுதி கடும் மனித நேய நெருக்கடியில் சிக்கியுள்ளது. எகிப்து மற்றும் காசா எல்லை பகுதியிலுள்ள ரஃபா நுழைவாயில் சுமார் 20 இலட்சம் காசா மக்களுக்கு“வாழ்வாதாரத்திற்கான வழியாக” மாறியுள்ளது.
ஷான்சி மாகாணத்தின் யுஞ்செங் நகரிலுள்ள ஜிவாங் மலையில், பனியால் மூடப்பட்ட வயல்கள், இயற்கையின் தனித்துவமான அழகான காட்சியை காட்டுகின்றன. சூரிய மறைவின் போது அடுக்குகள் கொண்ட வயல்கள், கிராம வீடுகள் மற்றும் மின் உற்பத்தி காற்றாலைகளை ஒருங்கிணைந்து, ஒரு அற்புதமான ஓவியம் போல் காட்சியளிக்கின்றன.
ஹூபேய் மாகாணத்தின் என்ஷியிலுள்ள தையாங்கே கிராமத்தில், பனியால் மூடப்பட்ட வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் அழகாக இருக்கின்றன. ஒரு மாபெரும் டிராகன் ஊர்ந்து செல்வது போல் காட்சியளிக்கின்றன.
அமெரிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757ரக விமானம் அட்லாண்டாவில் 20ஆம் நாள் புறப்படுவதற்கு முன்பு, அதன் முன் சக்கரம் கழன்று விழுந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனவரியில் பணவீக்க விகிதம் 7 விழுக்காட்டுக்கும் மேல் உயர வாய்ப்புண்டு என்று அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஜனவரி 24ஆம் நாள் மாலை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அண்டிகுவா மற்றும் பர்புடாவின் தலைமையமைச்சர் ஜஸ்துங் புரோன்னைச் சந்தித்துப் பேசினார்.
2023ஆம் ஆண்டு சீனாவின் மத்திய அரசுசார் நிறுவனங்களின் வருவாய் 39லட்சத்து 80ஆயிரம் கோடி யுவானை ஈட்டியுள்ளது. மொத்த லாபத் தொகை 2லட்சத்து 60ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது.
இரு நாடுகளிடையே தூதாண்மை உறவை மீண்டும் தொடங்கி வைப்பது குறித்து சீன மக்கள் குடியரசும் நவ்ரு குடியரசும் 24ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்களின்படி, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் 737 மேக்ஸ் 9 விமான குழுவுக்கான சமீபத்திய உள் ஆய்வில், பல விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் நேரப்படி ஜனவரி 23ஆம் நாள் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென் மினிகுசி தெரிவித்தார்.
துருக்கி அரசுத் தலைவர் தயீப் எர்டோகனின் அழைப்பின் பேரில், ஈரான் அரசுத் தலைவர் செயத் இப்ராஹிம் ரைசி ஜனவரி 24ஆம் நாள் துருக்கியில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று, உள்ளூர் நேரப்படி 23ஆம் நாள் துருக்கி அரசு தலைவர் மாளிகையின் செய்தி பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பென்குயின் மற்றும் முட்டை உருவமுள்ள இவை, அண்மையில் அமெரிக்கத் தேசிய விண்வெளி பணியகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கேலக்ஸி. வானியல் தொலைநோக்கி மூலம் கண்காணிக்கப்பட்ட இது, நமது பூமிக்கு 2.3 கோடி ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ளது.
2023ஆம் ஆண்டில், சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார நிலைமை, பலமுறை இயற்கைச் சீற்றங்கள் ஆகிய அறைக்கூவல்களுக்கு மத்தியில், சீனாவின் வேளாண்மை மற்றும் கிராமப்புறத் துறை நிதானமாக வளர்ச்சி அடைந்தது
பல்வேறு நாடுகளுடன் பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயங்கரவாத எதிர்ப்புக்கான உலகளாவிய ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கவும் சீனா விரும்புகின்றது.
2023ஆம் ஆண்டின் முதல் 11 திங்கள்காலத்தில், ரஷிய-இந்திய வர்த்தக அளவு, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.9 மடங்கு அதிகரித்து, 59.7 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.
சீனாவின் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அக்சு மாவட்டத்தைச் சேர்ந்த வூஷ் வட்டத்தில் ஜனவரி 23ஆம் நாள் விடியற்காலையில் 2 மணியளவில், ரிக்டர் அளவு கோலில் 7.1ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அண்மையில் சியோங்ஆன் புதிய பிரதேசத்தில் ஓட்டுநர் இல்லாத விநியோக வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. முன்பதிவு செய்த நேரத்தின்படி, இந்த வாகனம் வருவதற்கு முன் தகவல் அனுப்பப்படும். விநியோக இடத்திற்கு இவ்வாகனம் வந்த பிறகு, குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி பொதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஹைனான் மாகாணத்தின் கியோங்காய் நகரிலுள்ள ஒரு காய்கறி தளத்தில், விவசாயிகள் மிளகு அறுவடை செய்கின்றனர். இவ்வாண்டின் தொடக்கம் முதல், கியோங்காய் நகரில் மிளகு, கத்திரிக்காய், அவரைக்காய் மற்றும் பிற காய்கறிகள், சீனா முழுவதிலும் உள்ள சந்தைகளுக்கு விற்கப்படுகின்றன.
சீன புத்தாண்டு நெருங்கி வருவதால், ஹைனான் மாகாணத்தின் வென்ச்சாங் நகரிலுள்ள உலர்ந்த கடல் உணவு சந்தையில், சுற்றுலாப் பயணிகள் பழைய தெருவைப் பார்வையிடும்போது புத்தாண்டுக்கான உலர்ந்த கடல் உணவை வாங்கி, புகைப்படங்களை எடுக்கிறார்கள்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்துக்கிடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்புக்கான சீனாவின் சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கையை, சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜனவரி 23ஆம் நாள் வெளியிட்டது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின், வெளிநாட்டு செய்திஊடங்கங்களால் கூறப்படும் பன்னாட்டு திறமைகள் ஹாங்காங்கிலிருந்து பெருமளவில் வெளியேற்றியுள்ளனர் என்ற கூற்றை மறுத்தார்.
இலங்கையில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை 29.5 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில், சீனாவின் அஞ்சல் துறையில் மொத்தம் 16248 கோடி பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. இது, 2022 ஆம் ஆண்டை விட 16.8 சதவீதம் அதிகமாகும். இதில், விரைவு அஞ்சல் வழியாக 13 ஆயிரத்து 207 கோடி பொதிகள் அனுப்பப்பட்டு, 2022ஆம் ஆண்டை விட 19.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரச் செயல்பாடுகளின் பல்வேறு குறியீடுகள் பொதுவாக மீட்சியடைந்து சீராக வளர்ந்து வருகின்றன.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட கடுமையான குளிர்கால புயலால் ஏற்பட்ட விபத்துகளில், குறைந்தபட்சம் 89 பேர் உயிரிழந்தனர் என்று ஜனவரி 21ஆம் நாள் அமெரிக்காவின் கொலம்பியா ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.
புளோரிடா மாநிலத்தின் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் 2024ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் இலிருந்து விலகுவதாகவும், இத்தேர்தலில் டொனல்ட் டிரம்ப்க்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தார்.
சீன வசந்த விழாவை முன்னிட்டு, ஷான்துங் மாநிலத்தில் ஹூவா மோ எனும் சீனப் பாரம்பரிய இனிப்பின் தயாரிப்பு மற்றும் விற்பனை மக்களிடையில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறையான குளிர்காலத்தின் சிறப்பு மீன்பிடிப்பு ஜனவரி 20ஆம் நாள் சீனச் சின்ஜியாங்கின் போஸ்டேங் ஏரியில் நடைபெற்றது நிறைய பயணிகளின் வருகையை ஈர்த்துள்ளது.
விபத்துக்குள்ளாகிய ரஷியாவின் ஃபால்கன்-10 ரக ஜெட் விமானத்தை, ஆப்கானிஸ்தானின் மீட்புதவிப் பணியாளர்கள் தேடிக் கண்டுபிடித்தனர். இவ்விமானத்தில் பயணம் செய்த 6 பேரில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கடற்படையும், தாய்லாந்தின் ரோயல் கடற்படையும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் முதன்முறையாக இரு தரப்புகளிடையேயான கடல் பயிற்சியை நடத்தியுள்ளன என்று இந்தியாவின் ஊடகம் ஒன்று ஜனவரி 20ஆம் நாள் செய்தி வெளியிட்டது. அதேவேளை, இரு நாடுகள் கடல் கண்காணிப்பு விமாங்களின் மூலம் 36ஆவது கூட்டுக் கண்காணிப்பு கடமையை நிறைவேற்றியுள்ளன.
அடுத்த வாரம் தொடங்கி மே திங்கள் வரை, நேட்டோ ராணுவ பயிற்சியை நடத்தவுள்ளது. இது, பல தசாப்தங்களில் மேற்கொள்லப்படும் மிக பெரிய அளவிலான ராணுவ பயிற்சியாகும் என்று நேட்டோவின் ஐரோப்பிய கூட்டணிப்படைத் தலைவர் கிலிஸ்தோஃப் கவோரி 18ஆம் நாள் அறிவித்தார்.
பாகிஸ்தான்-ஈரான் உறவை மீட்பது இரு நாட்டு பொது நலனுக்குப் பொருந்தியது என்று பாகிஸ்தானின் இடைக்கால அரசுத் தலைமையமைச்சர் அன்வார் உல்ஹக் ககார் 19ஆம் நாள் தெரிவித்தார்.
சீன அரசவையின் செய்தி அலுவலகம் ஜனவரி 19ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 2023ஆம் ஆண்டு சீன தொழில் மற்றும் தகவல்மயமாக்கலின் வளர்ச்சியை அறிமுகப்படுத்தியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 18ஆம் நாள் அபித்ஜானில் ஐவரிகோஸ்ட்டு வெளியுறவு அமைச்சர் காகு ஹுவாஜா லியோன் அடோமுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இவை, உலகளவில் நெசவு பொருட்களில் தாவரங்களால் மட்டும் வண்ணமேற்றப்பட்ட ஒரே ஒரு பட்டுப் துணியாகும். மிக உயர்ந்த மதிப்பு கொண்டதால், இது நெசவு துறையின் மென்மையான தங்கம் என அழைக்கப்படுகிறது.
கேரட் தொழில் முன்மாதிரி மண்டலத்தில் விவசாயிகள் கேரட் அறுவடை வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழில் மூலம், உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரித்ததோடு, கிராமப்புறங்களிலும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
14ஆவது தேசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 17ஆம் நாள் முதல் பிப்ரவரி 27ஆம் நாள் வரை உள் மங்கோலியாவில் நடைபெறவுள்ளது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பிறகு பெரிய அளவிலான தேசிய குளிர்கால விளையாட்டு நிகழ்வு நடத்துவது இது முதன்முறையாகும்.
ஜனவரி 17ஆம் நாள், டோகோ அரசு தலைவர் ஃபாரே க்னாசிங்பே லோமில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீயைச் சந்தித்தார்.
கிராமப்புறங்களில் புத்தாண்டை வரவேற்கும் விதம், நன்கொடை கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் அங்கு வசித்து வரும் முதியோர் நலனில் அக்கறை செலுத்துவதோடு, கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டுமென நம்பப்படுகிறது.
சீனாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள ஜிஷி நகரில் குளிர்கால மீன்பிடிப்பு விழா அண்மையில் துவங்கியது. பிற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பயணிகள் இவ்விழாவில் பங்கேற்க இந்நகருக்கு வந்துள்ளனர். 3 கோடி யுவானுக்கு மேலான வருமானம் ஈட்டப்படக் கூடும் என்று மதிப்பிடப்பட்டது.
ஈராக்கிலுள்ள குர்திஷ் தன்னாட்சி பிரதேசத்தின் மீது ஈரான் தொடுத்த தாக்குதல் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத்துடன் தொடர்புடையது. ஈரானின் இலக்கு மொசாத் என்று கூறப்படுகிறது. இதனை தாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹ்யான் 17ஆம் நாள் தெரிவித்தார்.
ஜனவரி 16ஆம் நாள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ துனிசியாவிலிருந்து புறப்பட்டு, அழைப்பின் பேரில் டோகோவிற்குப் பயணம் மேற்கொண்டார்.
2023ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு கோடியே 26லட்சத்து 5ஆயிரத்து 820கோடி யுவான் ஆகும். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 5.2விழுக்காடு அதிகமாகும்.
ஜனவரி 16ஆம் நாள் காலை டாவோஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 2024ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் சீன தலைமையமைச்சர் லி ச்சியாங் கலந்துகொண்டு, சிறப்பு உரை ஆற்றினார். சீனா வாக்குறுதிகளை மதிக்கும் நாடு என்றும், சீன சந்தையை தேர்ந்தெடுப்பது ஆபத்து அல்ல, ஒரு வாய்ப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஹுவா மோ என்ற அப்பங்களின் சமையல் மற்றும் விற்பனை சுறுசுறுப்பாக உள்ளது. டிராகன் உருவமுள்ள அப்பங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
வரும் பிப்ரவரி 10ம் நாள், சீனாவின் டிராகன் புத்தாண்டின் முதல் நாள். இதனை முன்னிட்டு, சந்தைகள், அங்காடிகள் முதலியவற்றில் டிராகன் உருவமுள்ள அலங்காரப் பொருட்கள் பிரபலமாக விற்கப்பட்டு வருகின்றன.
ஜனவரி 15ஆம் நாள் துனீசிய அரசுத் தலைவர் கைஸ் சயீத், தலைநகரான துனீசியாவில் பயணம் மேற்கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயைச் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம் ஈராக் பாதுகாப்பு துறையினர் ஒருவரின் செய்தியை மேற்கோள் காட்டி, ஈராக்கின் வட பகுதியில் அமைந்துள்ள குர்தி தன்னாட்சி மாநிலத்தின் தலைநகர் எர்பிலில் அமெரிக்க துணை தூதரகத்தின் அருகில் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது.
ஜனவரி 15ஆம் நாள் காலையில், சீன தலைமையமைச்சர் லி ச்சியாங் மற்றும் சுவிஸ் கூட்டாட்சியின் தலைவர் வயோலா ஆம்ஹெர்ட் பெர்னில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுவிஸ் கூட்டமைப்பின் உருப்பினரும், பொருளாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சருமான ஜுய் பம்லான் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இருநாட்டு தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை நிறைவேற்றியதாக சீனா மற்றும் ஸ்விட்சர்லாந்து அறிவித்தன. அதிகாரப்பூர்வ மேம்படுத்தல் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க இருதரப்பு ஒப்புக்கொண்டது.
குளிர்கால விடுமுறையைத் தொடங்கிய குழந்தைகள், 600 ஆண்டுகள் வரலாறு கொண்ட சீன அரண்மனை அருங்காட்சியகத்தில் விளையாடி, சீன நாகரிக அடையாளங்களைத் தேடிய காட்சி உங்களுக்காக~~
ஒரே சீனா என்ற கோட்பாட்டை நவ்ரு ஏற்றுக்கொண்டு, தைவானுடன் கூறப்படும் “ தூதாண்மை உறவைத்” தூண்டித்து, சீனாவுடன் தூதாண்மை உறவை மீண்டும் துவங்குவதற்கு சீனா பாராட்டு மற்றும் வரவேற்பைத் தெரிவிக்கிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் 60 சதவீத வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என்று ஜனவரி 14ஆம் நாள், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், முறையே 40 சதவீதம் மற்றும் 26 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். பொதுவாக, உலகில் கிட்டத்தட்ட 40 சதவீத வேலைவாய்ப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவால் பாதிப்பு ஏற்படுத்தும் என்றார்.
ஐ.நா. பாதுகாப்பு அவை அண்மையில் ஏற்றுக்கொண்ட செங்கடல் நிலைமை பற்றிய தீர்மானம் யேமனின் மீது வான் தாக்குதல்களை நடத்த எந்த நாட்டிற்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை என்று ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஸாகரோவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜனவரி 14ஆம் நாள், கெய்ரோவில் எகிப்தில் பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சமேஹ் ஹசன் ஷூக்ரியுடன் Sameh Hassan Shoukry சந்திப்பு நடத்தினார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான கிளாஸ் ஸ்வாப், சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் வயோலா ஆம்ஹெர்ட், அயர்லாந்து தலைமையமைச்சர் லியோ வரத்கர் ஆகியோர் அழைப்பின் பேரில், சீன தலைமையமைச்சர் லி ச்சியாங், உலக பொருளாதார மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜனவரி 14ஆம் நாள் காலை சிறப்பு விமானம் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார். அவர், சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்தில் அரசு முறை பயணத்தை மேற்கொள்கிறார்.
ஜனவரி 14ஆம் நாள், சீன அரசவையின் உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அரபு நாடுகள் லீக்கில் பயணம் மேற்கொண்ட போது, அதன் தலைமைச்செயலாளர் அகமது அபுல் கெய்துடன் சந்திப்பு நடத்தினார். பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
எகிப்தில் பயணம் மேற்கொண்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஜனவரி 14ஆம் நாள் கெய்ரோவில் எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே ஹசன் ஷூக்ரியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்பு துறை அமைச்சர் லியு ஜியன்சாவ் ஜனவரி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டோனி பிளிங்கனுடன் சந்திப்பு நடத்தினார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான் படைகள், ஏமெனின் ஹெளதி ஆயுதவாதிகளின் பல இலக்குகள் மீது வான் தாக்குதலை நடத்தியது பற்றி ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரைஸ் அறிக்கையை வெளியிட்டார்.
காசா பிரதேசத்தின் அப்பாவி மக்களை குடியமர்த்த நிர்பந்திப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, ஐ.நா பாதுகாப்பவை ஜனவரி 12ஆம் நாள் வெளிப்படைக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும் சீனத் துணைத் தலைமையமைச்சருமான லியுகொச்சூங் ஜனவரி 15 முதல் 24ஆம் நாள் வரை உஹன்தாவில் நடைபெறவுள்ள அணி சேரா இயக்கத்தின் 19ஆவது உச்சி மாநாட்டிலும், 3ஆவது தெற்கு உச்சிமாநாட்டிலும் கலந்துகொண்டு, அல்கேரியா, கேமரூன், தான்சானியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்வார்.
குவன்மிங்கில் நடைபெற்ற அமைதிக்கான பேச்சுவார்த்தையில், மியன்மார் அரசு இராணுவப்படைக்கும் மூன்று ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை உருவாக்கியுள்ளது.
ஜனவரி 11ஆம் நாள், அர்ஜென்டின தேசிய புள்ளிவிவர பணியகம் வெளியிட்ட உள்நாட்டுப் பொருளாதார நிலைமை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டின் டிசம்பரில் அர்ஜென்டினாவின் மாதாந்திர பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தை விட 25.5 சதவீதம் அதிகரித்தது. 2023ஆம் ஆண்டில் அதன் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 211.4 சதவீதத்தை எட்டியுள்ளது.
நீடித்து வரும் குண்டு வெடிப்பு, தூய்மையான குடிநீர் பெற முடியாத சூழல் உள்ளிட்ட சமாளிக்கப்பட முடியாத அறைக்கூவல்களைக் காசா பிரதேசத்துக்கான மனிதநேய உதவி சந்தித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஜனவரி 11ஆம் நாள் சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்துடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு உரையாடினார்.
பாரம்பரிய புத்தாண்டை வரவேற்கும் விதம், சீனாவின் சுங் யுவான் நகரில் ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலத்திலும் பெருமளவிலான மீன்பிடிப்பு நடைபெறுகிறது. இத்தகைய மீன்பிடி கலாச்சாரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பரவியுள்ளது. இதுவும், உள்ளூர் சுற்றுலாவுக்கான புகழ் பெற்ற சின்னமாக மாறியுள்ளது.
பெய்ஜிங் மாநகரின் மையப் பகுதியில் தெற்கு முதல் வடக்கு திசையில், 7.8 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஒரு நேர் கோட்டின் பக்கத்தில், சீனத் தனிச்சிறப்புடைய கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவை, சீன நாகரிகத்தின் சிறப்பை வெளிக்காட்டுகின்றன.
பாரம்பரிய சீனப் புத்தாண்டுக்கு முன்பான ஒரு மாதக் காலத்தில், தொடர்புடைய முன்னேற்பாட்டுப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. சந்தைகளிலுள்ள அலங்காரப் பொருட்கள், உணவுப் பொருட்கள் முதலியவை புத்தாண்டின் வரவேற்புகளை ஏற்படுத்தியுள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 2024ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 18ஆம் நாள் வரை எகிப்து, துர்னிஸ், தொகோ, கொட்தீவா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன வாகன தயாரிப்புச் சங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 3 கோடியே 1 லட்சத்து 61 ஆயிரம் மற்றும் 3 கோடியே 94 ஆயிரத்தை எட்டியது. இது 2022ஆம் ஆண்டை விட முறையே 11.6 சதவீதம் மற்றும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 49 லட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 2022ஆம் ஆண்டை விட 57.9 சதவீதம் அதிகமாகும். சீனா உலகின் மிகப் பெரிய வாகன ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில், சீனா உலகின் இரண்டாவது பெரிய வாகன ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது.
சீனாவிற்கு வரும் வெளிநாட்டு மக்கள் வசதிக்காக, 5 புதிய கொள்கைகள் ஜனவரி 11ஆம் நாள் முதல் அமலுக்கு வருமென சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி ஜனவரி 10ஆம் நாள், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, எகிப்து அரசு தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பாலஸ்தீன அரசு தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோர், தெற்கு ஜோர்டானிலுள்ள அகாபா நகரில் பேச்சுவார்த்தை நடத்தி, காசா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்க முடிவு செய்தனர்.
நீங்கள் பார்ப்பது, உலகின் மிக சிவப்பான பறவைகள். அழிவின் விளிம்பில் உள்ள இந்த பறவைகள், அண்மையில் சீனாவின் ஒரு சதுப்பு நிலப் பூங்காவுக்கு வருகை தந்து, பறவை ரசிகர்களை ஈர்த்துள்ளன.
ஜனவரி 10ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தைவானிடையேயான தொடர்பு பற்றிய கேள்விக்குப் பதிலளித்தார்.
ஜனவரி 8ஆம் நாள் முதல் 9ஆம் நாள் வரை, அமெரிக்காவின் வாஷிங்டனில், சீன-அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் 17வது பணிக் கூட்டம் நடைபெற்றது. சீன மத்திய ராணுவ ஆணையத்தின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலகத்தின் தலைவர் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை உதவி அமைச்சர் ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
6ஆவது சீனச் சர்வதே இறக்குமதி பொருட்காட்சி பரவல் செல்வாக்கு பற்றிய அறிக்கை ஜனவரி 9ஆம் நாள் வெளியிடப்பட்டது. மேலும், 7ஆவது பொருட்காட்சிக்கான உடன்படிக்கையில் நிறுவனங்கள் கையொப்பமிடும் விழா ஷாங்காய் நகரிலுள்ள தேசிய பொருட்காட்சி மையத்தில் நடைபெற்றது.
சீன-துனீசிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவு முன்னிட்டு, ஜனவரி 10ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், துனீசியா அரசுத் தலைவர் கைஸ் சையத் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
இவர்கள் விவசாயிகள் அல்ல, சுற்றுலா பயணிகள் ஆவர். அன் ஹுய் மாநிலத்தில் சிறிய தக்காளி பயிரிடும் தளம் ஒன்று, கிராமப்புறச் சுற்றுலாவின் சிறப்பை வெளிக்கொணர்ந்து, சுற்றுலா பயணிகள் பங்கேற்புடன் தக்காளி அறுவடை அறிமுகப்படுத்தி உள்ளது.
சீனாவின் குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஃபூ ஷி வட்டம் தொடங்கி, குவேய் ச்சோ மாநிலத்துக்குச் செல்லும் உயர்வேக நெடுஞ்சாலையின் கட்டுமானம் நிதானமாக முன்னேறி வருகிறது.
யுனிசெப் அமைப்பு ஜனவரி 9ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, தற்போது காசா பகுதியில் பஞ்ச அபாயம் அதிகரித்து வருகிறது. உள்ளூரில் 5 வயதிற்குட்பட்ட 3 இலட்சத்து 35 ஆயிரம் குழந்தைகள் கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர்.
அமெரிக்க பொருளாதார பகுப்பாய்வு பணியகம் மற்றும் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டின் நவம்பரில் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக பற்றாக்குறை 6320 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது 2023ஆம் ஆண்டின் அக்டோபரில் இருந்த 6450 கோடி டாலரை விட குறைவாகும். 2023ஆம் ஆண்டின் நவம்பரில் அமெரிக்காவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை முறையே 25 ஆயிரத்து 370 கோடி டாலர் மற்றும் 31 ஆயிரத்து 690 கோடி டாலரை எட்டியுள்ளது.
சீனக் கம்யூனிஸிட் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 9ஆம் நாள் பெய்ஜிங்கில் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச நிலைமை மற்றும் சீனத் தூதாண்மை கருத்தரங்கின் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்தியாவில் விமானப் பணியாளர்களின் ஓய்வு நேரத்தை அதிகரித்து அழுத்தத்தைக் குறைக்கும் விதம், பணி நேரக் கட்டுப்பாட்டில் முக்கிய மாற்றத்தை விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் மேற்கொண்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் சீனாவில் 40 கோடிக்கும் அதிகமான டன் தானியப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்று தேசிய தானிய மற்றும் பொருள் இருப்பு பணிக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது.
2023ஆம் ஆண்டில் சீன இருப்புப்பாதை குழுமம், இருப்புப்பாதை திட்டமிடல் கட்டுமானம், சரக்கு போக்குவரத்து சேவை ஆகியவற்றை வலுப்படுத்தி, விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகள் என்ற கொள்கையைப் பேணி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியின் கூட்டு கட்டுமானத்தின் உயர் தர வளர்ச்சியில் புதிய சாதனைகளை அடைய ஊக்குவித்துள்ளது.
சீனத் தேசிய அஞ்சல் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டில், சீனாவின் அஞ்சல் துறையின் தபால் சேவை மற்றும் அஞ்சல் துறை வருமானங்கள் முறையே 16 ஆயிரத்து 200 கோடியாகவும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானாகவும் இருந்தன.
சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டுத் தடைகளுக்கு எதிரான சட்டத்தின் படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து பாதுகாப்பு தொழில் நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. தைவான் பிரச்சினையில் சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கர் சிலருக்கு இத்தடை நடவடிக்கை கடுமையான எச்சரிக்கையாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 7ஆம் நாள் அறிவித்தது.
இந்தியாவில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை திருப்திகரமாக இருந்ததாகவும் இந்திய விமானப் போக்குவரத்து கண்காணிப்பு பொது இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இந்த போக்குவரத்து கால வரம்பு ஜனவரி 26ஆம் நாள் முதல் மார்ச் 5ஆம் நாள் வரை மொத்தம் 40 நாட்கள் நீடிக்கும். அவற்றில், பிப்ரவரி 8, 16, 20, 25ஆம் ஆகிய நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை உச்சம் அடையும்
‘அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா’ ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தின. இதில் வெளியிடப்பட்ட கூட்டு ஆவணத்தில், சீனாவுடன் தொடர்புடைய பொருத்தமற்ற உள்ளடக்கம் குறித்து தீவிர கவலை தெரிவித்ததாக ஜனவரி 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார். ஒத்துழைப்பு என்ற பெயரில் சீனாவின் உள்விவகாரங்களில் தொடர்பான நாடுகளின் தலையீட்டை சீனா தீவிரமாக எதிர்க்கிறது. தற்போது தென் சீனக் கடலின் நிலைமை பொதுவாக நிலையாக இருக்கின்றது. பிராந்திய இறையாண்மையையும் கடல் உரிமைகள் மற்றும் நலன்களையும் சீனா எப்போதும் உறுதியாக பாதுகாத்து வருகிறது என்று தெரிவித்தார்.
காசா பிரதேசத்தின் தென்மேற்குப் பகுதியின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல் ஜசீரா தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
புத்தாண்டு துவக்கத்தின் போது, சீனாவில் பல தொழில் நிறுவனங்கள் முன்பதிவுப் படிவங்களை நிறைவேற்றி, சுறுச்சுறுப்பாக புத்தாக்கம் செய்து வருகின்றன. இதனால், சீனாவின் ஆக்கத் தொழில் துறையின் அதிகரிப்புக்கான உள்ளார்ந்த ஆற்றல் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
சீனத் தேசிய அன்னிய செலாவணிப் பணியகம் 2023ஆம் ஆண்டின் டிசம்பர் இறுதியில் கையிருப்பில் உள்ள அன்னிய செலாவணி பற்றிய புள்ளிவிவரங்களை இவ்வாண்டின் ஜனவரி 7ஆம் நாள் வெளியிட்டது.