© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 26ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, இவ்வாண்டு பிப்ரவரி வரை, 75 சதவீத அமெரிக்க குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இரத்தத்தில் கரோனா வைரஸுக்கான எதிரணு கண்டறியப்பட்டது. இவர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று ஏற்பட்டிருந்ததை, இது காட்டுகிறது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை, அமெரிக்காவில் குழந்தைகளும் இளைஞர்களும் இந்நோய் தொற்றினால் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்குத் தடுப்பூசி போடும் விகிதம் மிக குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 நோய் பரவத் தொடங்கியது முதல் இதுவரை, அமெரிக்காவில் மொத்தம் 1 கோடியே 29 இலட்சம் குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.