வெளிநாடுகளில் அமெரிக்க உயிரியல் ஆய்வங்கள் மீதான ஆய்வில் புதிய கண்டுப்பிடிப்புகள்
2022-05-05 20:28:45

2001ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சிறப்பானது. ஜுலையில் உயிரி ஆயுதங்கள் மீதான சரிபார்ப்பை அமெரிக்கா மறுத்தது. செப்டம்பர் 11 தாக்குதல் நிகழ்ந்த ஒரு வாரத்துக்குப் பின் ஆந்த்ரக்ஸ் கடிதம் அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செய்தி அறைக்குள் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் அந்நாட்டின் உயிரியல் ஆய்வகங்கள் விரைவாக அதிகரித்து வருகின்றன.

ஆந்த்ரக்ஸ் கடிதம் பற்றி ஆய்வு செய்த போது, போர்ட் டிட்ரிக் உயிரி போர் திட்டத்துக்கான முன்னாள் பொறுப்பாளர் பேட்ரிக் இச்சம்பவத்துடன் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்பட்டார். பயங்கரத் தாக்குதலுக்கு முன் ஆந்த்ரக்ஸ் கடிதம் பற்றிய சோதனையை அவர் மேற்கொண்டார் என்று கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் என்ன?

1998ஆம் ஆண்டிலிருந்து அவர் பேட்டியளிக்கையில் உயிரி பயங்கரத் தாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அடிக்கடி வேண்டுகோள் விடுத்தார். அதேவேளை, ஆந்த்ரக்ஸ் பற்றிய கற்பிப்பு நடவடிக்கையையும், ஆந்த்ரக்ஸ் கடிதத்தை அனுப்பும் சோதனையையும் மேற்கொண்டு வந்துள்ளார். இவை எல்லாம், உயிரி ஆயுதங்கள் பொது ஒப்பந்தத்தைச் சேர்ந்த சரிபார்ப்பு இயங்குமுறையின் பேச்சுவார்த்தைக்கு முன் நிகழ்ந்தன.

2001ஆம் ஆண்டு ஜுலை, சரிபார்ப்பை அமெரிக்கா மறுத்ததோடு, இப்பேச்சுவார்த்தையிலிருந்து விலகியது. இது வெளிநாடுகளில் அமெரிக்காவின் உயிரியல் ஆய்வுக்கு வழிவகுத்தது. மேலும், அவ்வாண்டில்தான், தனது ஆயிரக்கணக்கான வசதிகள் உயிரி ஆயுத ஆய்வு மற்றும் உற்பத்தியுடன் தொடர்புடையவை என்பதை அமெரிக்கா பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொண்டது.

அமெரிக்காவின் உயிரியல் ஆய்வங்கள் உலகளவில் பரவலாக அமைந்துள்ளன. உக்ரைனிலுள்ள அதன் ஆய்வகத்தின் சுற்றுப்புறத்தில், 20 படையினர்கள் திடீரென சளிக்காய்ச்சலால் உயிரிழந்தனர். போர்ட் டிட்ரிக்கின் சுற்றுப்புறத்தில் கோவிட்-19 பரவலுக்கு முன் நுரையீரல் அழற்சி ஏற்பட்டது......இவற்றுக்கான காரணம் என்ன?