© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தெற்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடலைக் கடந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை அன்று தெரிவித்தது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி, அந்தமான் & நிக்கோபார், மேற்கு வங்காளம் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கடல் நிலை மிகவும் கொந்தளிப்பாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதனால், இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலுக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.