© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கையில் தொடர்ச்சியான கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும், ஆறுகள் மற்றும் மலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை மையம் மேலும் எச்சரித்துள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.