ESCAP ஆண்டுக் கூட்டத்தின் துவக்க விழாவில் வாங் யீ பங்கேற்பு
2022-05-23 15:58:58

ஆசிய-பசிபிக்கிற்கான ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் 78ஆவது ஆண்டுக் கூட்டத்தின் துவக்க விழாவில், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 23ஆம் நாள் குவாங்சோ நகரில் இருந்தவாறு காணொளி வழியாக பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

வாங் யீ கூறுகையில், ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதி மற்றும் செழுமை, இப்பிரதேசத்துடன் மட்டுமல்ல, முழு உலகின் எதிர்காலத்துடனும் தொடர்புடையதால், வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு, ஆசிய-பசிபிக் பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாகக் கட்டியமைத்து, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பை புதிய உயர் நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், சீனா நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் நிரந்தர அமைதி மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.