© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
நிலையான வைப்பு வசதி வட்டி விகிதம், நிலையான கடன் வட்டி விகிதம் ஆகியவற்றை தலா 100 அடிப்படை புள்ளிகளுடன் முறையே 14.5 மற்றும் 15.5 விழுக்காடாக உயர்த்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை புதன்கிழமை தீர்மானித்துள்ளது.
அதிகரித்து வரும் உள்நாட்டு பண வீக்கத்தைச் சமாளிப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், கடந்த 21 ஆண்டுகளில் மிக உயர்வான அளவில் இவ்வட்டி விகிதங்கள் இருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்தது.
உயர் பண வீக்கம் எதிர்வரும் காலத்தில் தொடரும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், பண வீக்கம் பற்றிய பாதகமான மதிப்பீட்டைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் இறுக்கமான நாணயக் கொள்கை அவசியம் என்று நாணயச் சபை கருத்து தெரிவித்தது.