© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கையில் மக்களின் கொந்தளிப்புக்கு மத்தியில் அரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சேவும், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கேவும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்வதற்கு ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் அபெய்வர்தனா சனிக்கிழமை தெரிவித்தார்.
தனது பதவியை ராஜிநாமா செய்து, புதிய அரசை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கே ஒப்புதல் அளித்தார். முன்னதாக, அவருக்குச் சொந்தமான வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக நடந்து வந்த போராட்டம் புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது.