© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
2022ஆம் ஆண்டுக்கான பெய்ஜிங் மனித உரிமை மன்றக்கூட்டம் ஜுலை 26ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சுமார் 70 நாடுகள், சர்வதேச அமைப்புகள், சீனாவுக்கான பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் முதலியவற்றைச் சேர்ந்த 200 அதிகாரிகளும் நிபுணர்களும் இதில் கலந்து கொண்டனர்.
நியாயம், நீதி மற்றும் அனைவரையும் அனைத்து செல்லும் மனித உரிமை ஆட்சிமுறையை கூட்டாக முன்னெடுப்போம் என்ற தலைப்பு குறித்து, அவர்கள் ஆழ்ந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
மேலும், தொடரவல்ல வளர்ச்சி மற்றும் மனித உரிமை காப்புறுதி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமை காப்புறுதி, பொது சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை காப்புறுதி, பலத்தரப்புவாதம் மற்றும் முழு உலகின் மனித உரிமை ஆட்சிமுறை உள்ளிட்ட 5 தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டன.