© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
55 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு அல்லது QR குறியீட்டு முறைமையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள், அரசுக்குச் சொந்தமான 107 பேருந்து நிலையங்களிலிருந்து நிலையான ஒதுக்கீட்டைத் தவிர கூடுதல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
ஆகஸ்ட் 1 முதல், இலங்கையின் எரிவாயு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு அல்லது QR குறியீட்டு முறை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்காக, இலங்கை அரசு கடந்த வாரம் ஒரு குழுவை நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.