இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செப்டெம்பர் மாதம் மீண்டும் திறப்பு
2022-08-24 11:21:00

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் செப்டெம்பர் மாதம் மீண்டும் திறக்கப்படும் என இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020ஆம் ஆண்டில்  பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட நிலையில், வகுப்புகள் இணைய வழியாக நடத்தப்பட்டன என்று இந்த ஆணையத்தின் தலைவர் அமரதுங்க கூறினார்.    

ஏறக்குறைய அனைத்து மாணவர்களும் தற்போது இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டனர். மேலும், கல்வி மற்றும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள், முன்பு போல் நடத்தப்படலாம் என துணைவேந்தர்கள் ஒப்புக்கொண்டதாக அமரதுங்க கூறினார்.