சிச்சுவானில் நிலநடுக்க நிவாரணப் பணி
2022-09-06 16:26:54

சிச்சுவான் மாநிலத்தின் கான்ஸி சோவைச் சேர்ந்த லூடிங் மாவட்டத்தில் செப்டம்பர் 5ஆம் நாள் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு, சீன அரசவையின் நிடுநடுக்க நிவாரணப் பணிக்குழு அன்றிரவு அவசர மேலாண்மை அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பாளர்களின் தலைமையில் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றது. மீட்புப் பணிக்கு ஆதரவாக, நிதி அமைச்சகம் மற்றும் அவசர மேலாண்மை அமைச்சகம் 5 கோடி யுவான் நிதி ஒடுக்கீடு செய்துள்ளன. அத்துடன், சிச்சுவான் மாநில அரசு கான்ஸு சோவுக்கு 5 கோடி யுவான் நிதியுதவி வழங்கியுள்ளது.

6ஆம் நாள் கான்ஸு சோ மற்றும் யாஆன் நகரின் தொடர்புடைய வாரியங்களிருந்து கிடைத்த தகவலின்படி, தற்போது வரை இந்நிலநடுக்கத்தால் 65 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேலானோர் காயமடைந்தனர்.