சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கு உலக அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்துக்கள்
2022-10-17 11:09:48

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின்  துவக்கத்தை முன்னிட்டு, உலகிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் நட்பார்ந்த பிரமுகர்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

இலங்கை ஐக்கிய தேசிய கட்சிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குமிடையிலான நட்புறவு நீண்டகாலமாக நிலவி வந்திருக்கின்றது. இது இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கும் இரு நாட்டு மக்களின் நலன்களை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்காற்று வருகின்றது என்று இக்கட்சியின் தலைவரும் அரசுத் தலைவருமான விக்லர் மசின்ஹா தெரிவித்தார்.

சீனாவிலும் உலகிலும் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும் முக்கியமான தருணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முழுமையான வெற்றிக்குத் தென் ஆப்பிரிக்கா காங்கிரஸ் கட்சித் தலைவரும் அரசுத் தலைவருமான ராமா ஃபோசா வாழ்த்து தெரிவித்தார்.

அர்ஜென்டீன அரசுத் தலைவர் ஃபர்னாண்டஸ், பாலஸ்தீன அரசுத் தலைவர் அபாஸ், ரஷியாவின் ஐக்கிய ரஷியாக் கட்சியின் தலைவரும் கூட்டாட்சி பாதுகாப்பு மன்றத்தின் துணை தலைவருமான மெட்வதேவ், அரபு நாடுகள் லீக்கின் தலைமைச் செயலாளர் கேட் உள்ளிட்ட பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.