சிபிசியின் 20ஆவது தேசிய மாநாடு:திபெத் பிரதிநிதிக் குழுவுடன் கலந்தாய்வு
2022-10-18 16:38:39

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட திபெத் பிரதிநிதிக் குழுவுடன் தோழர் வாங் யாங், 17ஆம் நாள், 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கை பற்றி விவாதித்தார். அவர் கூறுகையில்,

கடந்த பத்து ஆண்டுகள், திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மிக சீராக வளர்ந்து பொது மக்கள் மிக அதிகமான நலன்களைப் பெற்ற காலமாகும். திபெத் தன்னாட்சிப் பிரதேசம், புதிய யுகத்தில் திபெத் நிர்வாகம் பற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். நிதானம், வளர்ச்சி, இயற்கை சுற்றுச்சூழல், எல்லைப் பாதுகாப்பு ஆகிய பணிகளை சரியாகப் புரிந்து, இணக்கம், செழுமை மற்றும் நாகரிகம் படைத்த அழகிய திபெத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.