சீனா மீது அவதூறு பரப்புவதில் சில மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வி:சீன வெளியுறவு அமைச்சகம்
2022-11-01 20:14:29

சின்ஜியாங், ஹாங்காங் மற்றும் திபெத் உள்ளிட்டவை சீனாவின் உள்விவகாரங்களாகும். மனித உரிமைப் பிரச்சினையை அரசியலாக்கி இரட்டை நிலைப்பாடு எடுப்பதை எதிர்ப்பதாகவும் மனித உரிமையைக் காரணமாகக் கொண்டு சீன உள்விவகாரங்களில் தலையிடுவதை எதிர்ப்பதாகவும் 31ஆம் நாள் திங்கள்கிழமை நடைபெற்ற ஐ.நா பொது பேரவையின் 77ஆவது கூட்டத்தொடரின் குழுக் கூட்டத்தில் 60க்கும் மேலான நாடுகள் வெளியிட்ட கூட்டு உரையில் தெரிவித்தன. சர்வதேச சமூகம் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். மனித உரிமைப் பாதுகாப்பைக் கூட்டாக மேம்படுத்த வேண்டும் என்று உரையில் வலியுறுத்தப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லீஜியன் நவம்பர் 1ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சர்வதேச சமூகம், குறிப்பாக பரந்துபட்ட வளரும் நாடுகள் மனித உரிமையை அரசியலாக்குவதை எதிர்த்துள்ளன. குறிப்பிட்ட சில மேற்கத்திய நாடுகள், சின்ஜியாங் உள்ளிட்ட விவகாரங்களைக் காரணமாகக் கொண்டு சீனாவின் மீது  அவதூறு பரப்பி வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சி தோல்வி அடையும் என்றார்.

சுமார் நூறு நாடுகள் மறுபடியும் ஐ.நாவில் குரல் எழுப்பி சீனாவின் சரியான நிலைப்பாடு குறித்த நீதி புரிந்துணர்வு மற்றும் ஆதரவைத் தெரிவித்தன என்றும் சௌ லீச்சியன் கூறினார்.