புதிய அரசியல் முறைமையின் மூலம் ஒத்துழைப்பு: எதிர்க்கட்சிகளுக்கு இலங்கை அரசுத் தலைவர் அழைப்பு
2023-01-18 10:31:45

பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அவர்களின் மேம்பாட்டுக்குப் பணிபுரியவும் ஒரு புதிய அரசியல் முறைமையின் மூலம் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்ராமசிங்கே செவ்வாய்கிழமை எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் இதைத் தெரிவித்ததாக அரசுத் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேலும், மக்களுக்கு உதவியளிப்பதில் அரசு ஈடுபடுவதாகவும், மருந்துகளுக்காக இவ்வாண்டில் 3000 கோடி முதல் 4000 கோடி இலங்கை ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் விக்ராமசிங்கே தெரிவித்தார்.