© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பாகிஸ்தானின் சிந்து மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி 18ஆம் நாள் கூறுகையில், இம்மாநிலத்தின் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்று 17ஆம் நாளிரவு தாக்கப்பட்டது. இதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமுற்றனர். மேலும், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்குப் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹமது ஷாபாஸ் ஷெரீப், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் ஒற்றுமையுடன் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.