பாதுகாப்பு நடவடிக்கையால் புதிய தோற்றமளிக்கும் மேற்கு ஏரி
2023-02-22 20:02:09

மேற்கு ஏரியின் அழகு ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து சென்றுள்ளது. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, அழிவிலிருந்து மேற்கு ஏரியை மீட்கும் விதம், 20க்கும் மேற்பட்ட பெரிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2002ஆம் ஆண்டில், ட்செ ஜியாங் மாநிலத்தில் ஷி ச்சின்பிங் பதவியேற்ற முதல் ஆண்டில் தான், மேற்கு ஏரிக்கான விரிவான பாதுகாப்பு திட்டப்பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஓராண்டுக்கும் குறைவான காலத்தில், ஷி 3 முறை மேற்கு ஏரி பகுதியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போதுதான், மேற்கு ஏரி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பணி, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“குட்டித்தூக்கம் செய்த போது மேற்கு ஏரியின் மூடுபனி மற்றும் அலைகளும், தாமரை மலர்களுக்கு மத்தியில் படகு சவாரிக் காட்சியும் கனவில் தோன்றின.”என்ற கவிதை வரிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞர் வர்ணித்த காட்சிகள் தற்போது காணப்படலாம். மேற்கு ஏரி பாதுகாப்புக்கான பல்வேறு முயற்சிகளின் காரணமாக, திறப்பு, சுயநம்பிக்கை மற்றும் தன்னடக்கம் கொண்ட சீனாவை வெளிப்படுத்தும் சிறந்த அரங்காக மேற்கு ஏரி மாறியுள்ளது.