தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவக்கம்
2023-03-05 09:20:31

நாட்டின் உச்ச அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்களும் சுமார் 3000 புதிய பிரதிநிதிகளும் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தேசிய அமைப்புகளின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவது, அரசுப் பணியறிக்கை பரிசீலனை செய்வது, 2023ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகள் மற்றும் கடமைகளை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சி நிரல்கள் இவ்வாண்டின் கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட உள்ளன.