கொழும்பு துறைமுக நகரிலுள்ள நிறுவனங்களுக்கு ஊக்கம்
2023-05-24 09:51:26

கொழும்பு துறைமுக நகரில் இயங்க தொடங்கும் முக்கிய நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் விதம் அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவின் முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் பந்துல குணவர்தன மே 23ஆம் நாள் கூறுகையில், துறைமுக நகரம், இலங்கை அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றும். இது, நாட்டு பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்கும் நவீனமயமாக்கத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.