வங்காளதேசத்தில் தொடர்ந்து நீடிக்கும் மின்சார நிறுத்தம்
2023-06-05 18:45:26

வங்காளதேச எரிசக்தி வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி 4ஆம் நாளிரவு கூறுகையில்,

தட்பவெப்ப நிலை உயர்வு ஏற்படுத்திய மின்சார தேவையின் அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால், முழு நாடளவில் மின்சார நிறுத்தம் 2 வாரங்களாக நீடிக்க கூடும் என்றார்.

பிரிட்டனின் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ஆடை உற்பத்தி தொழிற்துறை வங்காளதேச பொருளாதாரத்தின் முக்கிய தூணாகும். மின்சார பற்றாக்குறை, அந்நாட்டின் ஆடை உற்பத்தி தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆடை ஏற்றுமதி குறைவு, அதன் அன்னிய செலாவணி வருமானத்தையும் எரிபொருள் இறக்குமதியையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.