சர்வதேச ஒழுங்குமுறையின் உருவாக்கத்திற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வரும் பிரிக்ஸ்
2023-08-24 11:21:29

பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு புதன்கிழமை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்  உரை வழங்கினார். பிரிக்ஸ் நாடுகள், சர்வதேச ஒழுங்குமுறையை உருவாக்குவதில் முக்கிய சக்தியாக திகழும். உலகிற்கு உறுதித்தன்மை , நிலைப்புத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை கொண்டு வர வேண்டும் என்று ஷிச்சின்பிங் முன்வைத்தார்.

வணிகம், நிதித் துறைகளைச் சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை விரிவாக்கவும், மக்களிடையே தொடர்பு மற்றும் நாகரிகப் பரிமாற்றங்களை அதிகரிக்கவும்  நீதியைக் கடைப்பிடித்து  உலக நிர்வாகத்தை மேம்படுத்தவும் பிரிக்ஸ் நாடுகள் பாடுபட வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களும் உச்சிமாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.