© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்காவில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஆகஸ்டு 25, 26 ஆகிய நாட்களில் நிகழ்ந்தன. அவற்றில் காயம் மற்றும் உயிரழப்பு ஏற்பட்டது.
25ஆம் நாளிரவு ஓக்லஹோமா நகரில் நடைபெற்ற ரக்பி போட்டியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமுற்றனர் என்று உள்ளூர் காவற்துறை தெரிவித்தது. அன்றிரவு சிக்காகோ நகரில் நடைபெற்ற பேஸ்பால் போட்டியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயமுற்றனர்.
மேலும், மாசசூசெட்ஸ் மாநிலத்தின் பாஸ்டன் நகரில் 26ஆம் நாள் முற்பகல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயமுற்றனர்.
அதேநாள், புளோரிடா மாநிலத்தின் ஜாக்சன்வில்லே நகரிலுள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் கொலைக்காரர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இனப் பகையுடன் தொடர்புடையது என்று தெரிய வந்துள்ளது.