© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
காசாவின் வடக்குப் பகுதி தற்போது இஸ்ரேலின் கட்டுபாட்டின் கீழ் உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கல்லாண்ட் 14ஆம் நாள் தெரிவித்தார். வரும் சில நாட்களில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேறி செல்ல தான் அனுமதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், காசாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஹமாஸ் அமைப்பு மீது இலக்கு வைக்கும் துல்லியமான இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புப் படை 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தவிரவும், பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இந்த மோதல் நிகழ்ந்த பின், காசா பகுதியில் ஏற்பட்ட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11320ஆக உயர்ந்துள்ளது என்று ஹமாஸ் செய்தி அலுவலகம் தகவல் வெளியிட்டது. மேலும், இஸ்ரேலிய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, தற்போது வரை இஸ்ரேலில் சுமார் 1200பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.