சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது
2023-11-27 18:38:19

நவம்பர் 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறுகையில்,

இப்பேச்சுவார்த்தை நேற்று தென்கொரியாவின் ஃபூசன் நகரில் 26ஆம் நாள் நடைபெற்றது. சீன-ஜப்பான்-தென்கொரிய ஒத்துழைப்பு பற்றிய 10 ஆண்டுகால முன்னாய்வு உள்பட மூன்று நாடுகள் எட்டியுள்ள கருத்து ஒற்றுமைகளை நடைமுறைப்படுத்தவும் மூன்று நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்புக்காக நிபந்தனையை உருவாக்கவும் மூன்று தரப்புகளும் ஒப்புகொண்டன என்றார்.

சீன-ஜப்பான்-தென்கொரிய தாராள வர்த்தக மண்டலம் பற்றிய பேச்சுவார்த்தையை மூன்று நாடுகள் மீண்டும் துவங்க வேண்டும். சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் இணைந்து, மூன்று நாடுகளின் ஒத்துழைப்பை சரியான பாதைக்குத் திரும்ப முன்னேற்றும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்ததாக வாங் வென்பின் கூறினார்.