© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஐ.நா.வளர்ச்சி திட்ட அலுவலகம் 28ஆம் நாள் புதிதாக வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 20ஆண்டுகளில், கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் ஏற்படும் வெள்ளம் காரணமாக, உலகளவில் கடலோரப் பிரதேசங்களில் வசிக்கும் சுமார் ஒரு கோடியே 40இலட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 2100ஆம் ஆண்டு வரை, இந்த ஆபத்து காரணமாக பாதிக்கப்படக் கூடுவோர்7கோடியே 30இலட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பசுமை இல்ல வெளியேற்றம் உயர்ந்த நிலையில் இருக்கிறது என்றால், 2100ஆம் ஆண்டு வரை, சுமார் ஒரு இலட்சத்து 60ஆயிரம் சதுர கலோமீட்டர் கடலோர நிலம் கடல் நீரில் மூழ்க கூடும்என அஞ்சப்படுகின்றது. ஈக்வடார், இந்தியா, வியாட்நாம் உட்பட நாடுகளின் கடலோர நகரங்கள் பாதிக்கப்படக் கூடும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இது தொடர்பாக இவ்வறிக்கையிலும் குறிப்பிடப்பட்டதாவது, பசுமை இல்ல வெளியேற்றத்தைக் குறைத்து, உலகளவில் தட்ப வெப்பம் உயர்வு அளவை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் கட்டுபாட்டுக்குள் வந்தால், கடல் நீரில் மூழ்குவதை எதிர்கொள்ளும் இந்த நிலம் பகுதிகளில் 50சதவிதம் ஆபத்திலிருந்து தப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.