© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கையின் கடல் பகுதியில் மீன்பிடித்ததாக, 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், மூன்று இழுவை படகுகளையும் கைப்பற்றியதாக கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்திய மீனவர்கள் மற்றும் இழுவை படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்வளப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் இலங்கையின் கடல் வளத்தை பேணிகாப்பதை கருத்தில் கொண்டு, வெளிநாட்டு இழுவை படகுகளின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, இலங்கை கடற்பரப்பில் வழக்கமான ரோந்துப்பணிகளை மேற்கொள்வதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் 2023ஆம் ஆண்டு, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 343 பேரைக் கைது செய்தது மற்றும் ஆயிரக்கணக்கான கிலோகிராம் கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.