ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு 200,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
2024-02-02 17:10:42

2024 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை புரிந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள்  தெரிவிக்கின்றன.

இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சீனாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை புரிந்ததாகவும், ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து ஒரு ஆயிரத்து 687 சுற்றுலாப் பயணிகள்  வருகை புரிந்ததாகவும் தரவுகள் காட்டுகின்றது.  

2023 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 14 லட்சத்து 87 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். இது 2022 ஆம் ஆண்டில் இருந்து 106.6 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாத்துறை, இலங்கையின் சிறந்த வெளிநாட்டு வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றாக திகழ்கின்றது. இலங்கை 2024 ஆம் ஆண்டில், 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.