UNRWAஐ பரிசீலனை செய்ய சுதந்திர குழு நியமிப்பு:ஐ.நா
2024-02-06 09:55:06

அண்மை கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி முகாம் நடுநிலையை உறுதிப்படுத்துகிறதா என்பதைப் பரிசீலனை செய்து விதியைக் கடுமையாக மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட போது பதிலளிக்கும் வகையில், ஒரு சுதந்திர புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது என்று ஐ.நா 5ஆம் நாள் அறிவித்தது.

ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸும் இம்முகாமின் இயக்குநர் பிலிப் லாஸரினியும் கலந்தாய்வு நடத்திய பிறகு இப்புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டது.

ஐ.நாவின் தகவலின்படி, இக்குழு, பிரெஞ்சு முன்னாள் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனாவின் தலைமையில் மூன்று ஐரோப்பிய ஆய்வு அமைப்புகளுடன் ஒத்துழைக்கும்.