© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் இதுவரை 15,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் 10,417 வழக்குகளும், பிப்ரவரி மாதத்தில் இதுவரை 4,996 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
மேற்கு மாகாணத்தில் அதிகபட்சமாக 5,275 பேரும், வட மாகாணத்தில் 3,657 பேரும் டெங்கு காய்ச்சளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவாகியது என்றும், 57 பேர் உயிரிழந்தனர் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.