© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
14ஆவது சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் 8ஆவது கூட்டத்தொடர் பிப்ரவரி 27ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மகாமண்டபத்தில் நிறைவடைந்தது. புதிதாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ள தேசிய ரகசியத்தைப் பாதுகாக்கும் சட்டம் இக்கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதற்கு பின்னர், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20ஆவது அரசுத் தலைவர் உத்தரவில் கையொப்பமிட்டு இச்சட்டத்தை வெளியிட்டார். சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சௌ லெச்சி இக்கூட்டத்தில் தலைமை தாங்கினார்.
சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் பணியறிக்கை இக்கூட்டத்தில் கோட்பாடு ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேறு பதவி நியமனம் மற்றும் பதவி நீக்கப் பணியும் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.