14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் நிறைவு
2024-03-11 15:20:38

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் மார்ச் 11ஆம் நாள் மாலை 3 மணியளவில் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் அதன் நிறைவு கூட்டத்தில் பங்கெடுத்தனர்.