© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பெற்றோரை மிகவும் கவலையடையச் செய்வதே, குழந்தைகளின் எதிர்காலம் தான். குழந்தைகள் தவறு இழைத்தால், சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்று ஷிச்சின்பிங்கின் தாய் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் அரசுத் தலைவர் பதவி ஏற்ற பின், அவரது தாய் உறவினர்களுக்காக கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், தனது இதர குழந்தைகள், ஷிச்சின்பிங்கின் துறையில் தொடர்பு கொண்டிருக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். 2001ஆம் ஆண்டு, தனது வேலைப் பளு காரணமாக, ஷிச்சின்பிங் தனது தந்தையின் 88வது பிறந்தநாள் விழாவை தவறவிட்டார். அதே ஆண்டின் வசந்த விழாவின்போது, வேலை காரணமாக, அவரால் பொற்றோரைச் சந்திக்க இயலவில்லை. இருப்பினும், அவரது தாய் கூறுகையில், நீ நன்றாக வேலை செய்தால், நானும் அப்பாவும் மகிழ்ச்சி அடைவோம் என்று தெரிவித்தார்.
இன்றைய காலம் எவ்வளவு மாறினாலும், வாழ்க்கை முறை மாறினாலும், குடும்பத்தின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப கல்வி மற்றும் பாரம்பரியங்களின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.