2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி அதிகரிப்பு
2024-05-22 17:36:26

2024 ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த வர்த்தக ஏற்றுமதி 2023 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 3.55 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என ஏற்றுமதி வளர்ச்சி சபை (EDB) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6.47 சதவீதம் அதிகரித்து 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி வளர்ச்சி சபையின் கூற்றுப்படி, ஜனவரி முதல்  ஏப்ரல் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேயிலை 10.44 சதவீதமும், ரப்பர் உற்பத்தி பொருட்கள் 12.03 சதவீதமும், தென்னை மர தயாரிப்பு பொருட்கள் 23.44 சதவீதமும், உணவு மற்றும் குளிர்பானங்கள் 21.83 சதவீதமும் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி. நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஆண்டில் ஒட்டுமொத்த காலத்தில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளன என்று ஏற்றுமதி வளர்ச்சி சபை தெரிவித்துள்ளது.