ஈக்குவடோரியல் கினியாவின் அரசுத் தலைவருடன் ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தை
2024-05-28 18:43:30

சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈக்குவடோரியல் கினியா நாட்டின் அரசுத் தலைவர் தியோடோரோ ஓபியாங் நுகுமா முபாசோகோவுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், சீன-ஈக்குவடோரியல் கினியா உறவை நெடுநோக்குத்தன்மை வாய்ந்த விரிவான ஒத்துழைப்புக் கூட்டாளியுறவுக்கு உயர்த்துவதாக இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களின் முன்னிலையில், பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.