© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், மலேசியத் தலைமையமைச்சர் அன்வாருடன் ஜுன் 19ஆம் நாள் முற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு ஒத்துழைப்புகளை உறுதியுடன் ஆழமாக்கி, சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை, மேலும் உயரமான நிலைக்கு உயர்த்தி, மேலும் நெருங்கிய சீன-ஆசியான் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற இரு நாட்டுத் தலைமையமைச்சர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.
லீ ச்சியாங் கூறுகையில், இவ்வாண்டு, சீன-மலேசியத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன-மலேசிய நட்புறவு ஆண்டாகும். மலேசியாவுடன் இதை வாய்ப்பாக கொண்டு, சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விரும்புகிறது என்றார்.
அன்வார் கூறுகையில், ஒரே சீனா கொள்கையை மலேசியா உறுதியுடன் பின்பற்றுகிறது. சீனாவுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார்.