© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பெண்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வகையில் சிறப்பு கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தொழில்துறை மற்றும் மறுகட்டமைப்புத் திட்டத்திற்கு 20 பில்லியன் ரூபாயை ஒதுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், அதில் பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டத்திற்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்து இருப்பதாக அந்நாட்டின் செய்தித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி, இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பங்களித்தவர்களில் 35 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
வரையறுக்கப்பட்ட நிதி. கல்வியறிவு மற்றும் கடன் பெறுவதற்குத் தேவையான சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் இல்லாமை போன்ற காரணங்கள் இலங்கையில் பெண் தொழில் முனைவோர்கள் பிரதானமாக எதிர்கொள்ளும் தடைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்திதுறை தெரிவித்துள்ளது.