நேபாளத்தில் நிலச்சரிவு சம்பவத்தில் 12 பேர் பலி
2024-07-12 20:23:54

நேபாளத்தின் கஸ்கி மற்றும் சிட்வான் ஆகிய இரு மாவட்டங்களில் 11,12 ஆகிய இரு நாட்களில் மலைப்பகுதிகளில் நிகழ்ந்த மலை நிலச்சரிவுகள் காரணமாக, 12பேர் உயிரிழந்தனர், 65பேரைக் காணவில்லை என்று காவல்துறை 12ஆம் நாள் தெரிவித்தது.

12ஆம் நாள் அதிகாலையில், மாவட்டத்தின் நெடுஞ்சாலை பகுதியில், மலை நிலச்சரிவினால், இரு பயணிகள் பேருந்துகள் அடித்து செல்லப்பட்டன. பேருந்துகளில் பயணித்த 65 பேரையும் காணவில்லை என்று சிட்வான் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு பேருந்துகள் ஆற்றில் விழுந்திருக்கலாம் எனசிட்வான் காவல்துறை அதிகாரி ஒருவர் காணவில்லை சந்தேகிக்கப்பட்டதால், மீட்புதவி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், நேபாளத் தலைமையமைச்சர் பிரசாண்டா, மீட்புப் பணியை துரிதப்படுத்துமாறு பாதுகாப்புப்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.