டிரம்ப் மீதான துப்பாகிச் சூடு பற்றி அமெரிக்கா புலனாய்வு
2024-07-15 09:55:07

அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 13ஆம் நாளிரவு, பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிராசரத்தின் போது சுட்டப்பட்டார். இதில் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய தகவல் 14ஆம் நாள், அந்நாட்டு புலனாய்வுப் பணியகம் வெளியிட்டது.

அவரின் பெயர் தாமஸ் மேத்யூ க்ருக்ஸ், வயது 20 என்று தெரியவந்துள்ளது. அவர் டிரம்பை சுட்டதற்காக நோக்கம் இது வரை தெரியவில்லை.

அமெரிக்க செய்திஊடகங்கள், க்ரூக்ஸின் வாகனத்தில் வெடிப்பொருள்கள் இருந்தன என்றும் தந்தையின் துப்பாக்கியை அவர் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளன.